Skip to main content

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பன்னீர் கரும்பு இல்லாததைக் கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Farmers struggle lack of sugarcane in Pongal gift package!

 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் அதையொட்டி வரும் ஆற்றுத்திருவிழாக்களை முன்னிட்டு கரும்புகள் அறுவடை செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்பை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று சில்லறையில் விற்பனை செய்வர்.

 

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு கொடுக்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. கடந்த ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கியது. பன்னீர் கரும்பை அரசு கொள்முதல் செய்து வந்ததன் காரணமாக விவசாயிகளுக்கு மொத்தமாக பணம் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். இதை நம்பி பன்னீர் கரும்பு விவசாயிகள் தங்களின் சாகுபடி பரப்பளவை இந்தாண்டில் விரிவுபடுத்தியிருந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த நிலையில், அரசிடமிருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு வராததால், பன்னீர் கரும்பு விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட பன்னீர் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதையடுத்து கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி, சமுட்டிக்குப்பம், கிருஷ்ணன்பாளையம், புலியூர், காட்டுசாகை, அம்பலவாணன்பேட்டை, கிருஷ்ணகுப்பம், கட்டியங்குப்பம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி நான்கு முனைச் சந்திப்பு அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் ஒரு கையில் பன்னீர் கரும்பு, மறு கையில் பூச்சி மருந்தை ஏந்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்தும்; சாலையில் இலை இல்லாமல் பரிமாறப்பட்ட உணவையும் அதனருகில் பூச்சி மருந்து பாட்டிலை வைத்தும்; கரும்புக் கட்டை படுக்கவைத்து ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

இதையடுத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு சாலைமறியலில் ஈடுபட்ட பன்னீர் கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்றால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை இணைத்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.  கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கோட்டாட்சியர் கூறியதையடுத்து, பன்னீர் கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கரும்பு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.