Skip to main content

தகராறை தட்டிக்கேட்ட விவசாயி கத்தியால் குத்தி கொலை!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

Farmer


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது தாமல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். வயது 55. இவரது தம்பி முருகன். முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் ஆகிய இருவருக்குமிடையே சொத்துப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
 


இந்த நிலையில் சம்பவத்தன்று 7 மணியளவில் மகேந்திரன் தனது உறவினர்களான ஆமூரைச் சேர்ந்த குமார், அவரது மகன்கள் அருள், திவாகரன் மற்றும் சுபாஷ் ஆகியோருடன் தாமல் கிராமத்திற்குச் சென்று மகேந்திரனுக்கு ஆதரவாக முருகனிடம் தகராறு செய்துள்ளனர். இதனை நேரில் பார்த்த முருகனின் அண்ணன் சுந்தரம் ஏன் இப்படித் தேவையில்லாமல் என் தம்பியிடம் வந்து பிரச்சனை செய்கிறீர்கள், சொத்துப் பிரச்சினை பற்றிப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் அல்லது நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் அதைவிட்டுவிட்டு அவ்வபோது இப்படிக் கும்பலாக வந்து அடாவடி செய்யலாமா என்று தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தரப்பினர், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சுந்தரத்தின் மார்பில் பலமாகக் குத்தி விட்டனர். சுந்தரத்தின் மார்பிலிருந்து ரத்தம் பீரீட்டு வழிய கத்தியால் குத்திய கும்பல் பயந்து ஓடிவிட்டனர். உடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சுந்தரத்தை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 

 


சுந்தரம் கொலை செய்யப்பட்ட தகவல் திருநாவலூர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவத்தில் மகேந்திரன் தரப்பைச் சேர்ந்த அருண் என்பவர் சுந்தரத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேந்திரன், அவர் தரப்பைச் சேர்ந்த குமார் அவரது மகன்கள் அருண் திவாகரன் மற்றும் சுபாஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.