Skip to main content

கரோனா அச்சத்தால் மந்தமான மாட்டுச் சந்தை!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021
Famous cattle trade slowed down by second wave of Corona

 

ஈரோட்டில் பிரபலமான கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இங்கு நடைபெறுகிற கறவை மாட்டுச் சந்தை மிகவும் புகழ்பெற்றது. இதற்காகவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாட்டு வியாபாரிகள் அதிகளவில் வந்து இங்கு மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

 

குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒவ்வொரு வாரமும் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இரண்டாவது அலையாக கரோனா தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியா முழுக்க ஏற்படும் தினசரி பாதிப்புகளில் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த இரு மாநிலங்களிலும் கரோனா வேகமாகப் பரவி வருவதால், இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த இரண்டு மாநிலத்துக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதன் காரணமாக 25 ஆம் தேதி வியாழக்கிழமை ஈரோடு கருங்கல்பாளையத்தில் கூடிய மாட்டுச் சந்தைக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில வியாபாரிகள் ஒருவர்கூட வரவில்லை.

 

பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வரமுடியவில்லை. இதன் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. இந்த மாட்டுச் சந்தைக்கு 400 பசுக்கள், 200 எருமை மாடுகள், 100 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. அதில் பசு மாடுகள் ரூபாய் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூபாய். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைக்கும், வளர்ப்புக் கன்றுகள் ரூபாய் 10,000 முதல் 15,000 வரையும் விற்பனையானது. சந்தையில், 80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கர்நாடக, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் வியாபாரிகள் அதிகளவில் வராததால் வியாபாரம் மந்தமாக நடந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.