தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் கள்ளநோட்டுக்களை கொடுத்து, குறிப்பிட்ட சதவிகித கமிஷன் தருவதாகக் கூறி புழக்கத்தில் விட்ட பெண் மற்றும் அவருக்கு உதவிய மூன்று நபர்களை கைது செய்துள்ளது காரைக்குடி வடக்குக் காவல்துறை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி, கண்கொத்திப் பாம்பாக கள்ள நோட்டு புழக்கத்தினை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர் காரைக்குடி தனிப்பிரிவுப் போலீசார். இவ்வேளையில், காரைக்குடி இடையர் தெரு பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம் நடத்தி வந்தவரிடம், தனது இரு சக்கர வாகனத்தை கொடுத்து பழுது நீக்கிப் பெற்றதற்காக ரூ.100 தாள்கள் 3ஐ (ரூ.300ஐ) கட்டணமாக கொடுத்திருக்கின்றார் சூடாமணிபுரத்தினை சேர்ந்த சேதுபதி.. தனக்கு கிடைத்தக் கட்டணமாக ரூ.300ம் சந்தேகத்திற்கிடமாக இருக்கவே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் மெக்கானிக் முரளி. அந்த கள்ள நோட்டுக்களை வைத்து சேதுபதியினை கஸ்டடிக்கு எடுத்து விசாரிக்கவே பெண் உட்பட மொத்தமாக நால்வர் சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து ரூ. 94 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளையும், ரூ. 22 லட்சம் குழந்தைகள் விளையாடும் நோட்டுகள் பறிமுதல் செய்த போலீசார் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் வந்த கதையோ சுவாரசியமானது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">