Skip to main content

உங்களுக்கு எவ்வளவு வேணும்...ஏமாற்றிய இளம் பெண்கள்...அதிர்ச்சி தகவல்!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

சென்னையில் ஒரு மோசடி கும்பல் கடன் வழங்குவதாகவும், வங்கியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்து பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை ஏமாற்றிய கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. சென்னை சிட்லபாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பீனிக்ஸ் கால் சென்டர் என்ற போலியான நிறுவனம் வாடகைக்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர்கள், அதில் வேலை பார்த்தவர்கள் என 12 பேர் பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக ஆசை காட்டியுள்ளனர். பொதுமக்களிடம் பேசும் போது வங்கிக்கு நேரடியாக சென்றால் கிடைக்கும் வட்டி தொகையை விட மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி ஆசை வார்த்தையில் மூளைச் சலவை செய்துள்ளனர். இவர்களுடைய ஆசை வார்த்தையை நம்புவர்களிடம் அவர்களின் ஈமெயில் முகவரிக்கு கடன் வழங்குவதற்கான விண்ணப்பம் அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். 

 

incident



அதில் பொதுமக்களின் ஆதார் கார்டு எண், வங்கிக் கணக்கு விவரம் என அனைத்து விவரங்களையும் கேட்டு உள்ளனர். பின்னர் 2 நாட்கள் வாடிக்கையாளர்களை தங்களை நம்பும் வகையில் அவர்களிடம் தொடர்பில் இருப்பார்கள். பின்பு தொடர்பு கொண்டு வங்கிக் கடன் உங்களுக்கு கிடைத்து விட்டதாகவும் அந்த கடனை பெற வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 50 ஆயிரம் இருக்கவேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர்.இதன் பின்னர் வங்கிக் கணக்குக்கு பணம் வந்தவுடன், கடன் வரவு வைப்பதற்கு ஒரு ஓடிபி வரும் என்று கேட்கின்றனர். வாடிக்கையாளரும் அந்த ஓடிபி என்னை சொல்ல, உடனே அவர்கள் வங்கியில் டெபாசிட் செய்திருந்த தொகை அந்த போலி கால் சென்டரால் அபகரிக்கப்பட்டு விடுகிறது. 

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சித்தாலப்பாக்கத்தில் உள்ள போலி கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வங்கி வாடிக்கையாளர்களின் பட்டியலை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை கால் சென்டரில் பணி அமர்த்தப்பட்ட 5 இளம் பெண்களை வைத்து வசீகரமான குரலில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களின் வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம்  கார்டு மற்றும் ரகசிய எண்களை பெற்று பல கோடி ரூபாய் பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி வந்தது தெரியவந்தது.


இதுபோல் கடந்த 6 மாதங்களாக பொதுமக்களிடம் பேசி பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளனர்.   இந்த மோசடிக்கு போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன் என்பவர் இளம் பெண்களை நேர்முக தேர்வு நடத்தி அதில் குரல் வளம் மிக்க பெண்களை தேர்வு செய்துள்ளார். இதற்காக இளம் பெண்களுக்கு மாத ஊதியமாக ₹10 ஆயிரம்  வழங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலி கால் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன்(26) மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த 5 இளம் பெண்கள் உட்பட 12 பேரை அதிரடியாக மத்திய குற்றப்பிரிவு  போலீசார் கைது செய்தனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.