Skip to main content

மலேசியாவில் இருந்து தேனி வந்த முகநூல் காதலி... நேரில் குண்டாக இருந்ததால் நிராகரித்த காதலன் மீது கூலிப்படையை ஏவ முயற்சி! 

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

ஃபேஸ்புக்கில் உருகி உருகி காதலித்த காதலி நேரில் குண்டாக இருந்ததால் வேண்டாம் என்று நிராகரித்த காதலனை காதலி கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

facebook love incident in theni..

 

தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மின் பொறியாளரான அசோக்குமார். இவர் முகநூல் மூலம் தோழியாக அறிமுகமான மலேசியாவைச் சேர்ந்த அமுதா அருணாச்சலம் என்ற பெண்ணிடம் காதல் வயப்பட்டு உள்ளார். முகப்புத்தகத்தில் காதலியான அமுதா அருணாச்சலம் அனுப்பிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை மட்டுமே பார்த்திருந்த காதலன் அசோக்குமார் நான் உன்னை நேரில் பார்க்க ஆசைப்படுகிறேன் என அவருடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். 

 

facebook love incident in theni..


அதற்கேற்றார்போல் காதலியான அமுதா அருணாச்சலமும் தான் விரைவில் தேனி வர இருப்பதாகவும், நேரில் நாம் சந்திக்கலாம் என்றும் அசோக்குமாரிடம் கூறியுள்ளார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனிக்கு வந்துள்ளார் அமுதா அருணாச்சலம்.  மலேசியாவிலிருந்து தன்னை பார்க்க வந்த முகப்புத்தக காதலியை ஆசை ஆசையாக பார்க்க புறப்பட்டு சென்ற அசோக்குமாருக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

 

facebook love incident in theni..


முகநூலில் போட்டோஷாப் செய்த புகைப்படங்களை பார்த்த அசோக்குமார் முதன்முறையாக நேரில் வந்திருந்த தனது முகப்புத்தக காதலியை பார்த்து அதிர்ந்து போனார். ஏனெனில் தன்னை சொக்கவைக்கும் அழகில் இருப்பார் என்று நம்பி சென்ற அசோக்குமாருக்கு அங்கே ஏராளமான நகைகளை கழுத்தில் அணிந்தபடி குண்டாக, உடல் பருமனாக இருந்த காதலியை கண்டு மிரண்டு போன காதலன் அசோக்குமார் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்றும் கூறி நழுவியுள்ளார். அழகை எதிர்பார்க்காமல் நல்ல மனதை மட்டும் எதிர்பார்த்து மலேசியாவிலிருந்து கழுத்து நிறைய தங்க நகைகளைப் போட்டுக்கொண்டு கடல் கடந்து வந்த அமுதா அருணாச்சலம் திருமணம் செய்தால் உன்னை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக அவரிடம் கூறியுள்ளார்.

ஆனால் தன்னால் முடியாது என்று அவருடைய வேண்டுகோளை நிராகரித்த அசோக்குமார் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். ஏமாற்றத்துடன் திரும்பிய அந்தப் பெண் மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய சகோதரி போனில் அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். என் சகோதரி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதான் காரணம் என அசோக்குமாரிடம் அந்தப் பெண்ணின் சகோதரி கூற,  அசோக்குமார் கைகால் ஓடாமல் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி உள்ளார். என்னை உண்மையிலேயே மன்னித்துவிடுங்கள் என்று கதறிய அசோக்குமாரிடம் நீ நேரில் மன்னிப்பு கேட்டால்தான் நான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறி நான் தேனிக்கு வருகிறேன் என்னிடம் வந்து மன்னிப்பு கேள் எனக் கூறியுள்ளார்.

 

facebook love incident in theni..


இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட காதலன் அசோக்குமார் முகநூல் காதலியின் சகோதரி வரச்சொன்ன ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தால் மீண்டும் ஒரு அதிர்ச்சி அசோக்குமாருக்கு காத்திருந்தது. முகநூல் காதலியின் சகோதரி போல பேசியதும் காதலியான அமுதா அருணாச்சலம் என்பதுதான் அந்த அதிர்ச்சி. இதனால் வெறுப்படைந்த அசோக்குமார் என்னை ஏமாற்ற தற்கொலை நாடகமாடி விட்டாயே என்று ஆத்திரமடைந்து இனி உன்னிடம் பேச மாட்டேன் என்று அங்கிருந்து புறப்பட்டு வந்ததோடு முகநூல் பக்கத்தையும் டெலிட் செய்துள்ளார்.

அதன்பின் மும்பையில் அசோக்குமார் பணிபுரியும் இடத்திற்கு சென்ற அந்த முகநூல் காதலி நானும் அசோக்கும் காதலித்தோம் என அங்கே உள்ளவர்கள் மத்தியில் அவர்களுடைய அந்தரங்கத்தை பற்றியெல்லாம் வெளிப்படுத்தியதால் அசோக்குமாரின் வேலையும் பறிபோனது. இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க ஒருகட்டத்தில் அசோக்குமாரின் வீட்டிற்கு சென்ற அந்தப் பெண் அசோக்குமாரின் வீட்டில் உள்ளவர்களிடம் மாப்பிள்ளை கேட்டுள்ளார். அசோக்குமாரின் பெற்றோர்களும் இதற்கு சம்மதிக்கவில்லை அதனால் அசோக்குமாரின் வீட்டிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று அடம்பிடித்ததால் அசோக்குமார் இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

facebook love incident in theni..


அந்தப்பெண்ணிடம் நடத்தப்பட்ட போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என தெரியவந்தது. அதோடு மட்டுமல்லாமல் அசோக்குமாரிடம் விஜி, அமுதா, கனகா, வசந்தி, விக்னேஷ்வரி, கவிதா அருணாச்சலம், பவித்ரா எனப் பல்வேறு போலியான கணக்குகளில் இருந்து முகநூலில் சாட்டிங் செய்து கொண்டிருப்பதும் விக்னேஷ்வரி என்பது தெரியவந்தது.

இப்படி எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இருவருக்கும் சமாதானம் பேசி வீட்டிற்கு செல்லும்படி அனுப்பிவைத்தனர் போலீசார். இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி அசோக்குமார் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு பணிக்காக சென்றுவிட்டார். இந்தநிலையில் அசோக்குமாரை தேடி தேனி முழுவதும் ஆட்டோவில் சுற்றிய விக்னேஷ்வரியிடம்  ஆட்டோ ஓட்டுனர் மதுரையில் கூலிப்படை ஒன்று உள்ளதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்தால் அசோக்குமாரை கடத்திவந்து திருமணம் செய்துவைப்பார்கள் எனக்கூறி மதுரையை சேர்ந்த அன்பரசு என்பவரின் மொபைல் எண்ணை கொடுத்துள்ளார்.

 

facebook love incident in theni..


அந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட விக்னேஷ்வரி அசோக்குமாரை கடத்தி வந்து எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் அவனை கொன்று விட வேண்டும் எனக் கட்டளையிட்டு கூலிப்படைக்கு ஒரு லட்சம் ரூபாய் தொகையைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் வார இறுதி நாட்களில் விடுமுறையில் வீட்டுக்கு வரும் அசோக்குமாரை தூக்கிச்செல்லும் திட்டத்துடன் கூலிப்படையை சேர்ந்த நால்வர் சுற்றித்திரிந்துள்ளனர். அந்த நேரத்தில் போலீசில் சிக்கி கொண்ட அந்த நான்கு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் விக்னேஸ்வரியின் திட்டங்கள் வெளியே வந்தது.

சரியான நேரத்தில் போலீசாரால் இந்த கும்பல் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை அசோக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர். இந்நிலையில் விக்னேஸ்வரியை போலீசார் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.