Skip to main content

சொத்து அபகரிப்பு; நடிகை கவுதமி பரபரப்பு புகார்

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

expropriation of property; Actress Gauthami sensational complaint

 

பிரபல நடிகை கவுதமி, காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்னுடைய சொத்துக்களை ஒருவர் அபகரித்துக் கொண்டதாகப் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

 

பிரபல திரைப்பட நடிகை கவுதமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், 'தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் என்பவரும் அவரது மனைவியும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். எனது உடல்நிலை மோசமான நிலையில் திரைப்படங்களில் தான் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. என்னுடைய நான்கு வயது மகளுக்காக சினிமா துறையில், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை ஒன்றிணைத்து மகளின் பெயரில் மாற்ற முடிவு செய்தேன். அதற்காக சொத்துக்களை வாங்கி விற்க அழகப்பன் என்பவரை அணுகினேன்.

 

அவ்வாறு அணுகும்போது தமிழகம் மட்டுமல்ல மற்ற பகுதியில் இருக்கக்கூடிய சொத்துக்களை ஒன்றிணைக்கவும் அவற்றை ஒரே இடத்தில் மகளின் பெயருக்கு மாற்றவும் உதவியை நாடினேன். ஆனால் அழகப்பன் தன்னை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே 25 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் தனக்கு உள்ளது. மற்ற எல்லாவற்றையும் விட என்னுடைய மகளின் கல்வி, உடல் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் சொத்துக்களை அவர் ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து தன்னையும் தனது மகளையும் அழகப்பன் மிரட்டி வருகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்