Skip to main content

அமைச்சர் ஊர் அருகே திறந்தவெளி கழிப்பிடம்...! - ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுங்க சார்!

Published on 04/11/2020 | Edited on 05/11/2020

 

erode

 

'தூய்மை இந்தியா' என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விளம்பரம் கொடுக்கிறார். அவரது கூட்டணியில் உள்ள அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி அரசு, குடிநீர், கழிப்பிட வசதியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என அறைகூவல் விடுகிறது. ஆனால் ஒரு அமைச்சரின் தொகுதி, அதுவும் அவரது கிராமத்திற்கு பக்கத்துக் கிராமத்தில் உள்ள பெண்களோ, 'அவசரத்திற்கு ஒதுங்க ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுங்க' என வேதனையுடன் கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள குருசான்வலசு காலனி என்ற கிராமத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் அதன் தாலுகா செயலாளர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் வைத்த வேண்டுகோள்கள், எங்களின் கிராமத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் பலரும் சாலையோரம் அல்லது திறந்த வெளியில் தான் அவசரத்திற்கு ஒதுங்குகிறோம். இது பெண்களுக்கு மிகப் பெரிய சிரமமாக உள்ளது. ஆகவே பெண்களுக்கு என ஒரு பொதுக் கழிப்பிட வசதி அமைக்க வேண்டும், அதே போல் கிராமத்தில் கழிவு நீர் தேங்காத வகையில், சாக்கடை வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும், குடியிருப்புகள் மீது தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும். வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும். முதியோர்களுக்குப் பாரபட்சமில்லாமல் உதவித்தொகை வழங்க வேண்டும்" எனக் கூறினார்கள்.

இந்தக் கூட்டத்தில், கிளை தலைவர் வசந்தமணி, செயலாளர் சுமதி, பொருளாளர் சகுந்தலா, துணைத் தலைவர் வசந்தா, துணைச் செயலாளர் சுமதி, நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் பாப்பா, மலர்கொடி உள்ளிடவர்கள் கலந்து கொண்டனர். இந்த குருசான்வலசு காலனி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வசிக்கும் அவரது கவுந்தப்பாடி கிராமத்திற்கு நான்கு கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.