Skip to main content

ரகசிய கண்காணிப்பில் பழைய குற்றவாளிகள்...

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

எம்.எல்.ஏ., அமைச்சர், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் என பலர் மீதும் பல குற்ற வழக்குகள் முந்தைய காலங்களில் இருந்த துண்டு. அதிகாரத்திற்கு வந்து விட்ட பிறகு வழக்குகள் நிறைவு பெற்று பலர் மக்கள் தலைவர்களாக உள்ளார்கள். ஒரு சிலர் மீது இப்போதும் வழக்குகள் இருக்கத்தான் செய்கிறது.
 

சரி இவர்களின் கதை ஒரு புறம் இருக்கட்டும்... இப்போது கண்கானிக்கப்படுபவர்கள் க்ரைம் சம்பவங்களில் முன்பு ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளிகள் தான்.

 

police



ஈரோடு மாவட்டத்தில் தொடர் வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை, கொள்ளை  வழக்குகளில் தொடர்புடையவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருகிறார்கள். அதில் தண்டனை காலம் முடிந்தோ அல்லது அவர்கள்  ஜாமினில் வெளியே வந்தவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களை தனிப்பிரிவு மற்றும் கிரைம் போலீசார் மூலம் பட்டியலிட்டு அதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார்  கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  
 

இவர்களது நடவடிக்கைகளை போலீசார் மிகவும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.    இவர்களில் யாரால் மீண்டும் பிரச்சனை வரும் அல்லது பிரச்சினை வரக்கூடும் என்பது குறித்து உளவு பிரிவு போலீசார் ரகசியமாக விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
 

 இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதில் பழைய  குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களை தீவி்ரமாக கண்காணித்து வருகிறோம்.  ஈரோடு மாவட்டத்தில் 920 பழைய குற்றவாளிகள் உள்ளனர்.  அவர்கள் பற்றிய பட்டியல் வைத்துள்ளோம். மேலும் அவர்களது நடவடிக்கையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். 


 

 அவர்கள் பெயர் முகவரி தற்போது அவர்கள்  என்ன செய்து வருகிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் ? போன்ற விவரங்களை தயார் செய்து அதனை கணினியில் பதிவு செய்து உள்ளோம். இந்த கண்காணிப்பு தொடரும் என்றார். 
 

"இதே போல் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும் போலீசார் ரகசியமாக கண்கானித்து அவர்கள் பெறும் லஞ்சத்தை, ஊழலை மக்களிடம் வெளியிட்டால் அது சிறப்பான, தரமான சம்பவமாக இருக்குங்க சார்" என நையாண்டி யாக அதே சமயம் சீரீசாகவும் பேசினார் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள ஒருவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்