ஈரோட்டில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் ஈரோடு சாலை போக்கு வரத்து கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே எழுந்து வரும் சூழலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன். இன்றும் நேரில் சென்று ஆய்வுசெய்த கதிரவன் வாக்குப்பதிவு பெட்டிகள் ஸ்ட்ராங்காக, பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறினார்.