Skip to main content

தொழிளாளர்களின் வாழ்வியலை மீட்கக் கோரி ஏ.ஐ.டி.யு.சி. நாடு முழுக்க ஆர்பாட்டம்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
erode - aiutuc



ஊரடங்கு என்ற பொது முடக்கத்தால் உருக்குலைந்துபோன ஏழைகள், கூலி தொழிலாளர்களின் வாழ்வை மீட்டெடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான  ஏ.ஐ.டி.யு.சி. இன்று இந்திய நாடு முழுமையாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
 

ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி, சங்க தலைவர் சின்னசாமி தலைமையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது.
 

அவர்களின் கோரிக்கைகள் வருமாறு:,
 

1.அன்றாடம் உழைத்து, ஊதியம் ஈட்டி அதன்மூலம் வாழ்க்கை நடத்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், உணவுப் பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுத்து முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!
 

2)பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்!
 

3)கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி, உணவுப்பொருட்களை விரைவில் வழங்கிடவும்,
 

4)நலவாரிய அட்டையை புதுப்பிக்கவில்லை என்று காரணம் கூறி பதிவு செய்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும்  அதிகமானவர்களுக்கு   நிதி வழங்க மறுக்காதீர் எனவும்,
 

5)ஓய்வூதியர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியும் உணவுப்பொருட்களும் உடனே  வழங்கிடுக எனவும்,
 

6)  நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களை நடத்தி,  நிவாரணநிதியும் உணவுப்பொருட்களும் சரியாகச் சென்று சேர்வதற்கான வழிவகைகளைத் தீர்மானித்து செயல்படுத்த வேண்டும்.
 

7) மத்திய மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி, நிரந்தர, கேஷுவல், கான்ட்ராக்ட்  தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழுச் சம்பளம் வழங்கச் செய்திடுக,
 

8) வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.
 

9) பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற, நிலுவை தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை கைவிட வேண்டும்.
 

10) புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் திரும்ப, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகளை, கட்டணம் வசூலிக்காமல் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும்,
 

11) கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, உயிரை பணயம் வைத்து பணி புரிந்த மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் எனவும்,
 

12) அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரைவில் வழங்கிட கோரியும்,
 

13) நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை  வழங்கு! அந்த ஊதியத்தையும் குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்து, இந்த பணியாளர்களுக்கு அரசு மரியாதை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 

14) ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி  உள்ளிட்ட திட்ட ஊழியர்களுக்கு 'தொழிலாளர்' தகுதி வழங்கி, குறைந்தபட்சம் மாதம்18,000 ரூபாய் சம்பளம் அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
 

என இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சத்தியமங்கலம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் என இந்தியா முழுக்க ஏஐடியுசி தொழிற்சங்கத்தில் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.