Skip to main content

ஆள் மாறாட்டத்தால் அப்பாவிக்கு கத்திகுத்து!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

 

சாலையில் நடந்து செல்லும் போது கூட பின்னால் வருபவர்கள், எதிரே நடப்பவர்களிடம் கொஞ்சம் கவனமாகத் தான் இருக்க வேண்டியுள்ளது. சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவனை பழி தீர்க்க முக அடையாளம் ஒன்றாக இருப்பதாக கருதி அப்பாவி ஒருவர் இப்போது கத்திகுத்து வாங்கி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ளார். 

k

இந்த பரிதாப சம்பவத்தின் விபரம் இதுதான்:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பழங்குடிப் பகுதியை சேர்ந்தவர் இயேசு ராஜ்.  லாரி டிரைவர். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.


இந்நிலையில் இயேசுராஜ் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றிருந்தார்.  அதன் பிறகு நேற்று இரவு திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் ஈரோடுக்கு  வந்தார்.  இன்று காலை ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலம்  ஈரோடு பஸ் நிலையம் வந்தார்.  பஸ் நிலையத்திற்குள் நடந்து வந்து கொண்டிருந்தார்.  அப்போது பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர்  திடீரென இயேசு ராஜை சுற்றி வளைத்து   கத்தியால் குத்தினார்.  இதில் இயேசு ராஜிக்கு  முகம் கையில் காயம் ஏற்பட்டது.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினார்கள். 

 

சம்பவம் குறித்து  ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  ரத்த வெள்ளத்தில் கிடந்த இயேசு ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  கத்தியால் குத்திய மர்ம நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த அனுமன் பள்ளியைச் சேர்ந்த குழந்தைசாமி என்பதும் சமையல் தொழிலாளி என தெரியவந்தது.


"தனக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் இன்று காலை நான் ஈரோடு பஸ் நிலையம் வந்தபோது என்னிடம் தகராறு செய்யும் நபர் தான் வந்துவிட்டார். என்னை அவன் அடிக்கும் முன்பே அவனை அடித்து குத்த வேண்டும் என முன்னெச்சரிக்கையாக நான் வைத்திருந்த கத்தியால் குத்தினேன்.  ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது நான் குத்த வேண்டிய ஆள் இவர் இல்லை என்று. இருவரும் பார்க்க ஒரே தோற்றத்தில் முக அமைப்பு ஒன்றாக இருந்ததால் ஆள்மாறாட்டம்  நடந்துவிட்டது." என கூற இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.  உடலில் பல இடங்களில் கத்திகுத்து வாங்கி காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அப்பாவி யேசுராஜ். ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து  குழந்தை சாமியை சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.