Skip to main content

வெண் பன்றிகள் வளர்ப்பில் சாதனை படைக்க துடிக்கும் பொறியியல் மாணவன்!

Published on 02/12/2018 | Edited on 02/12/2018

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் நவீன். இவர் மெக்கானிக் இன்ஜினியர் படித்த இளைஞர் ஆவார். படிப்பு முடித்த பின், விளையாட்டு தனமாகவும், செல்லபிராணியாகவும் வெண் பன்றி வளர்க்க ஆரம்பித்தார். நாளடைவில் அப்பன்றிகளின் இனப்பெருக்கத்தால், எண்ணிக்கைகள் அதிகரிக்கவே மகிழ்ச்சி அடைந்த அந்த இளைஞர் வெண் பன்றி வளர்ப்பை, தனது தொழிலாகவே மாற்றி கொண்டார். 

 

  A engineering student who works in the pigs Growth

 

இரண்டு பன்றிகளில் ஆரம்பித்த இவரது முயற்சியானது கடந்த 5 ஆண்டுகளில் 320 வெண் பன்றிகள் வரை கூடும் அளவிற்கு பாதுகாப்பு கூடாரங்கள், உணவு முறைகள், நோய் தாக்காமல் இருப்பதற்கு முன்னெசரிக்கை நடவடிக்கைகள், இனப்பெருக்க கால கட்டங்களில் செய்கின்ற வழிமுறைகள் என ஒவ்வொன்றும் குழந்தையை வளர்ப்பது போல் பார்த்து பார்த்து வளர்த்து வருகின்றார். 

 

  A engineering student who works in the pigs Growth

 

மேலும் இந்த வெண் பன்றிகளை குட்டிகளாக விற்பனை செய்வது மற்றும் 120 கிலோ அடைந்ததும் உணவிற்காக விற்பனை செய்வது என இரண்டு வகை முறையில்  விற்பனை செய்து வருவாய்  ஈட்டி வருகின்றார். இங்குள்ள பன்றிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பராமரிப்பு, ஆட்கள் கூலி என மாதம்தோறும் 50,000 ரூபாய் வரை செலவு செய்து வருகிறார்.  இப்பன்றிகளை சேலம், சென்னை, கோவை மற்றும் கேரளா என பல இடங்களில் இருந்து டன் கணக்கில் இடைத் தரகர்கள் வாங்கி செல்கின்றனர். 

 

இதனால் நேரடி கொள்முதல் செய்யமுடியாமல் இடைத்தரகர்கள் மூலம் ஏற்றுமதி நடப்பதால், ஒரு கிலோ 100 முதல் 110 ரூபாய் வரை, வாங்கிகொண்டு, வெளியே விற்கும் போது அதிக லாபத்திற்கு இடைதரகர்கள் விற்பனை செய்கின்றனர். 

 

  A engineering student who works in the pigs Growth

 

இதனால் எனக்கு வருடத்திற்கு செலவு மற்ரும் லாபத்தை கணக்கிடும் போது, மிக சொற்பான தொகையே லாபம் ஈட்ட முடிகிறது. ஆனாலும்  சோர்வடையாமலும், மனம் தளராமலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவதால் எனக்கு வருகின்ற தடைகளை பற்றி கவலை கொள்ளவில்லை என்று கூறுகிறார் .

 

தமிழக அரசானது தன்னைபோல் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வழிவகை செய்யும் வகையில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பிரின்ஸ் நவீன்

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Next Story

தமிழகத்தில் கால் பதிக்கும் 'அடிடாஸ்'

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
 'Adidas' to set foot in Tamil Nadu

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது.

இந்நிலையில், பிரபல நிறுவனமான 'அடிடாஸ்' முதல் முறையாக தமிழகத்தில் சென்னையில் கால்பதிக்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. சீனாவுக்கு பிறகு அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கால்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.