Enforcement officers test in Chennai!

Advertisment

வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாகவும், ரியல் எஸ்டேட் நிறுவனம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் மத்திய அமலாக்கத்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர், என்.எஸ்.சி.போஸ் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையின் அதிகாரிகள் இன்று (28/09/2021) காலை முதல் அதிரடியாக சோதனை செய்துவருகின்றனர். சி.ஆர்.பி.எஃப் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.