Skip to main content

ஆண்டு இறுதி... தொழிலதிபர்களை விடாமல் துரத்தும் ஐ.டி.ரெய்டு!!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

வருமானவரித்துறை ரெய்டு என்றாலே அது பிரபலமான அரசியல்வாதிகள் வீடுகள் உயரதிகாரிகள் வீடுகள் பெரும் தொழிலதிபர்கள் என இந்த ரெய்டு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது வருமானவரித்துறை தொழில் செய்கிற எல்லோரையும் கணக்கெடுத்து தனது அதிரடி ரெய்டில் தீவிரமாக உள்ளது. அப்படித்தான் ஈரோட்டில் கடந்த 2 மாதத்தில் நான்கைந்து நிறுவனங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியது இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு தொழில் நிறுவனத்தில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது.

 

End of year ... IT Raid to chase away businessmen !!


ராம் விலாஸ் என்ற உணவகம் நடத்தி வரும் ஒரு தொழிலதிபர். அவரது ஹோட்டல், தங்கும் விடுதிகளும் அவரது இன்னொரு தொழில் நிறுவனமான பேட்டரி கடையிலும் மற்றும் அவரது வீடு என நான்கு இடத்தில் இன்று காலை 25 வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துள்ளனர். வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரையும் வெளியே செல்லக்கூடாது என்றும் புதிதாக யாரையும் உள்ளே விடாமல் ரெய்டு செய்கிறார்கள்.

 

End of year ... IT Raid to chase away businessmen !!


வருவாய் ஆண்டு மார்ச் 31 என்பதால் இவர்கள் முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு கட்டினார்களா வருமான வரியை செலுத்தினார்களா என்றும், எவ்வளவு இவர்கள் இந்த வருடத்தில் வருவாய் ஈட்டினார்கள் அதற்கு எவ்வளவு வரி என புள்ளி விவரத்தோடு அலசுகிறார்கள். பொதுவாக இதுபோன்று தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் பெரும் செல்வந்தர்கள் அல்ல நடுத்தரமான ஒரு தொழிலதிபர்கள் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறைப்படி செலுத்தினாலும் இவர்களது உற்பத்தி மற்றும் விற்பனையில் கணக்கு வழக்கு 100% சரியாக இருக்காது. அதற்கு காரணம் இவர்கள் பொருள் வாங்கும் நிறுவனத்திற்கு கடன் வைத்திருப்பதும் பிறகு அதை கட்டுவதும் அதேபோல் இவர்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு கடனாக தருவதும் அதை மறுபடியும் வசூலிப்பதும் என ஒரு தொழிலில் நேக்கு போக்காக இருந்தால்தான் அந்த தொழில் நடத்த முடியும் என்பதால் அப்படி செய்வார்கள் இதைத்தான் வருமானவரித்துறை துல்லியமாக கண்டுபிடித்து நீங்கள் இவ்வளவு வரி செலுத்திய தீரவேண்டும் என்று அவர்களுக்கு வரி விதிப்பது வழக்கமாக இருக்கிறது.

பெரும் தொழில் புரிவோருக்கு இது சரியாக இருக்கும் ஆனால் நடுத்தரமான தொழில் புரிவோருக்கு இது அவர்களை நசுக்குவது போல் உள்ளது என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோடு பகுதியில் தொழில் புரிவோர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.