Skip to main content

ஆண்டு இறுதி... தொழிலதிபர்களை விடாமல் துரத்தும் ஐ.டி.ரெய்டு!!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

வருமானவரித்துறை ரெய்டு என்றாலே அது பிரபலமான அரசியல்வாதிகள் வீடுகள் உயரதிகாரிகள் வீடுகள் பெரும் தொழிலதிபர்கள் என இந்த ரெய்டு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது வருமானவரித்துறை தொழில் செய்கிற எல்லோரையும் கணக்கெடுத்து தனது அதிரடி ரெய்டில் தீவிரமாக உள்ளது. அப்படித்தான் ஈரோட்டில் கடந்த 2 மாதத்தில் நான்கைந்து நிறுவனங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியது இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு தொழில் நிறுவனத்தில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது.

 

End of year ... IT Raid to chase away businessmen !!


ராம் விலாஸ் என்ற உணவகம் நடத்தி வரும் ஒரு தொழிலதிபர். அவரது ஹோட்டல், தங்கும் விடுதிகளும் அவரது இன்னொரு தொழில் நிறுவனமான பேட்டரி கடையிலும் மற்றும் அவரது வீடு என நான்கு இடத்தில் இன்று காலை 25 வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துள்ளனர். வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரையும் வெளியே செல்லக்கூடாது என்றும் புதிதாக யாரையும் உள்ளே விடாமல் ரெய்டு செய்கிறார்கள்.

 

End of year ... IT Raid to chase away businessmen !!


வருவாய் ஆண்டு மார்ச் 31 என்பதால் இவர்கள் முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு கட்டினார்களா வருமான வரியை செலுத்தினார்களா என்றும், எவ்வளவு இவர்கள் இந்த வருடத்தில் வருவாய் ஈட்டினார்கள் அதற்கு எவ்வளவு வரி என புள்ளி விவரத்தோடு அலசுகிறார்கள். பொதுவாக இதுபோன்று தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் பெரும் செல்வந்தர்கள் அல்ல நடுத்தரமான ஒரு தொழிலதிபர்கள் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறைப்படி செலுத்தினாலும் இவர்களது உற்பத்தி மற்றும் விற்பனையில் கணக்கு வழக்கு 100% சரியாக இருக்காது. அதற்கு காரணம் இவர்கள் பொருள் வாங்கும் நிறுவனத்திற்கு கடன் வைத்திருப்பதும் பிறகு அதை கட்டுவதும் அதேபோல் இவர்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு கடனாக தருவதும் அதை மறுபடியும் வசூலிப்பதும் என ஒரு தொழிலில் நேக்கு போக்காக இருந்தால்தான் அந்த தொழில் நடத்த முடியும் என்பதால் அப்படி செய்வார்கள் இதைத்தான் வருமானவரித்துறை துல்லியமாக கண்டுபிடித்து நீங்கள் இவ்வளவு வரி செலுத்திய தீரவேண்டும் என்று அவர்களுக்கு வரி விதிப்பது வழக்கமாக இருக்கிறது.

பெரும் தொழில் புரிவோருக்கு இது சரியாக இருக்கும் ஆனால் நடுத்தரமான தொழில் புரிவோருக்கு இது அவர்களை நசுக்குவது போல் உள்ளது என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோடு பகுதியில் தொழில் புரிவோர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.