Skip to main content

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி; சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Employee passed away in Cuddalore electrocution

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாராயணசாமி(40). இவர் ஊத்தாங்கால் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பொன்னாலகரத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுது நீக்கம் செய்வதற்காக 12.30 மணியளவில் மின்வாரிய ஊழியர்கள் நாராயணசாமியை அழைத்துச் சென்றுள்ளனர். மின்மாற்றியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி நாராயணசாமி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத்  தெரிவித்தனர். இதையடுத்து நாராயணசாமி உறவினர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, விருத்தாசலம் - கடலூர் சாலையில், நேற்று ஊத்தாங்கால் மின்வாரிய அலுவலகம் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊ.மங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் விருத்தாசலம் வட்டாட்சியர் ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாகுல் ஹமீது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைய மாட்டோம் என மீண்டும் விருத்தாசலம்- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் லூர்து சாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இழப்பீடு கிடைக்கவும், உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

‘என் காதலிய என்னோட அனுப்புங்க’ -  இன்னொருவர் மனைவியை வம்புக்கு இழுத்த இளைஞர் 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 youth threatens to send someone else  wife with him

 

நாகப்பட்டினம் காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்து சென்றதால், பொது மக்கள் அச்சமடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

 

மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார்  அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக பயமுறுத்திய அவர், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தார். இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றார். அவரை துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது. 

 

தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். விசாரணையில், 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்தவர், அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

நாகையில் முன்னாள் காதலியும் இன்னொரு மனைவியான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'வேண்டும் வேண்டும் மின்சாரம் வேண்டும்' - தீப்பந்தத்துடன் போராடிய மக்கள்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

'We want electricity we want'- people protested with torches

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் வெள்ளநீர் வடியாததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மின்சார சேவை இல்லாததால் அவதியுற்ற மக்கள் சாலையை மறித்து தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராதாகிருஷ்ணன் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை காரணம் காட்டி தங்கள் பகுதிக்கு தற்போது வரை மின்சாரம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், மூன்று நாட்களாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்ததுடன், 'வேண்டும் வேண்டும் மின்சாரம் வேண்டும்' என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்