Skip to main content

மின்வாரிய ஊழியர் கொலை... முதல் மனைவியிடம் விசாரணை... மகன்கள் சிறையில் அடைப்பு

Published on 24/05/2020 | Edited on 24/05/2020

 

 

Electricity Employee



இரவு பணி பார்த்த மின்சார வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அவரது முதல்தாரத்து மனைவி மற்றும் மகன்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

அரியலூர் மாவட்டம், த.கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் கனகசபை (வயது50). இவர் திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு முதல் தாரத்தில் அஞ்சம்மாள் (வயது 48) என்ற மனைவியும், இவர்களுக்கு கமலாதேவி (வயது 31) என்ற மகளும், கலைச்செல்வம் (வயது 27), கலைவாணன் (வயது 23) என்ற மகன்களும் உள்ளனர். இதில் கமலாதேவிக்கு திருமணமாகிவிட்டது.  
 

மகளுக்கு திருமணமானவுடன் கனகசபை அவர்களை விட்டு பிரிந்து வந்து திருமானூர் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, சங்கீதா(வயது 34) என்பவரை திருமணம் செய்து கொண்டு, திருமழபாடி கிராமத்தில் சொந்தமாக வீடுகட்டி சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக அங்கே தங்கியுள்ளார். கனகசபைக்கும், சங்கீதாவிற்கும், தினகரன்(வயது 19), தினேஷ்குமார்(வயது 15) என்ற மகன்களும், திவ்யா( வயது 17) என்ற மகளும் உள்ளனர். கனகசபை திருமழபாடியிலிருந்து தினமும் கீழப்பழுவூருக்கு துணை மின் நிலையத்திற்கு பணிக்கு சென்று வருகிறார். முதல் மனைவி அஞ்சம்மாள் குடும்பத்தினருக்கும், கனகசபைக்கும் ஏதோ முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
 

இந்நிலையில் 18ந் தேதி இரவு 7 மணியளவில் கனகசபை இரவுப் பணிக்காக கீழப்பழுவூர் துணை மின் நிலையத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இரவு சுமார் 12 மணி வரை கனகசபை தூங்காமல் பீடர் பிரேக்கர் ரீடிங் எடுத்துக்கொண்டு  இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 19 ந்தேதி காலை டியூட்டி மாற்ற வந்த, மற்றொரு மின் பாதை ஆய்வாளர் ஆங்கியனூரைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 48), காலை 5.50 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வந்து அலுவலக கட்டிடத்திற்கு சென்று உள்ளே பார்த்த போது கனகசபை கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பதறிப் போன செல்வக்குமார் தனது உயரதிகாரிகளுக்கும், கீழப்பழுவூர் போலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
 

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன், துணை கண்காணிப்பாளர் திருமேனி, மற்றும் கீழப்பழுவூர் போலிசார் வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து கை ரேகைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது துணை மின் நிலைய வளாகத்தை சுற்றி வந்து நின்றது. மேலும், திருமானூர் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் கொலை செய்யப்பட்ட கனகசபை உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கீழப்பழுவூர் போலிசார், கொலை செய்யப்பட்ட கனகசபை முதல் மனைவி அஞ்சம்மாள், மகன்கள் கலைச்செல்வம், கலைவாணன் ஆகியோரிடமும், மேலும் இந்த கொலையில் ௯லிப்படைக்கு ஏதும் தொடர்பு உள்ளதா என கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Electricity Employee sons


 

கனகசபையின் இரண்டாவது மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீஸார் மின் ஊழியர் கனகசபை கொலை தொடர்பாக விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில், கனகசபை முதல் மனைவி அஞ்சம்மாளுக்கு, சொத்து, பணம் ஏதும் தரவில்லை என்றும், அதற்காக ஜீவனாம்சம் கேட்டு அஞ்சம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வருவதும் தெரியவந்தது.  இதனால் ஆத்திரமடைந்த அஞ்சம்மாளின் மகன்களான கலைச்செல்வம்(27) மற்றும் கலைவாணன்(22) ஆகியோர் சேர்ந்து தந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல மாதங்களாக காத்திருந்த அவர்கள், கனகசபைக்கு இரவு பணி எப்போது வரும் உடன் யாரும் பணியாற்றுகிறார்களா என நோட்டமிட்டும் வந்துள்ளனர்.
 

ல



இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு கீழப்பழுவூரில் உள்ள துணை மின்நிலையத்துக்கு கனகசபை பணிக்கு சென்று, அங்கு அவர் பணியிலிருந்த போது, அவருடன் பணியில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு கனகசபையின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கனகசபையை கொலை செய்த அவரது மகன்கள் இருவரையும் கீழப்பழுவூர் போலீஸார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தனது தந்தையையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.