Skip to main content

பேருந்து நிழற்குடையை மாற்றி அமைக்கும்போது மின் விபத்து; 4 ஊழியர்கள் படுகாயம்

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

 Electric mishap while changing bus shelter; 4 employees were injured

 

சென்னையில் பேருந்து நிழற்குடையை மாற்றி அமைக்கும் பொழுது ஏற்பட்ட மின் விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதி 16வது வார்டில் திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்புறம் பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்று இருந்தது. அந்த நிழற்குடையை இரவோடு இரவாக நேற்று மாற்று இடத்தில் வைப்பதற்கான பணி நடைபெற்றது. ஆனால் பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இன்று காலை மாற்று இடத்திலிருந்து பழைய இடத்திற்கே மீண்டும் பேருந்து நிழற்குடையை   நடுவதற்கான பணி நடைபெற்று வந்தது.

 

இதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு நிழற்குடையானது பழைய இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த பணியில் ஏராளமான மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்பொழுது  கிரேன் மேலே இருந்த மின்சாரக் கம்பியின் மீது உரசியது. இதனால் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் நான்கு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக கிரேன் கீழே இறக்கப்பட்டது. பலத்த காயமடைந்த நான்கு ஊழியர்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் எதிரொலி; 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு  

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

michaung Echo; Public holiday notification for 4 districts

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.  இதனால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள 98 சதவீத ஏரிகள் நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை முற்பகல் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (05/12/2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

90 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம்- திருவள்ளூருக்கு  'ரெட் அலர்ட்'

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

'Red Alert' for Tiruvallur

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி 'மிக்ஜாம்' புயல், புயல் என்ற நிலையில் இருந்து தீவிரப் புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிதீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்