Skip to main content

வீட்டில் திருட சென்றவர் மின்சார வேலியில் சிக்கி மரணம்!!!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
police investigation

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது ஐவதுகுடி பள்ளக்காடு. இந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இறந்தவரின் படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த சிலர் இறந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கரா பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இறைச்சி கடை வைத்திருப்பவர் என்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். இறந்து கிடந்தவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்த 61 வயது ஏழுமலை என்பதும் இவர் தற்போது நீமங்கலம் கிராமத்தில் குடும்பத்தினர்கள் வசித்து வருவதாகவும் கொங்கராபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த இவர் மீது கள்ளக்குறிச்சி திட்டக்குடி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில், 13 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பகலில் இறைச்சிக் கடையில் வியாபாரம் செய்துவிட்டு, இரவில் கிராமங்களுக்குள் சென்று வீடுகளில் திருடுவது ஏழுமலையின் தொழிலாக செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் நடு இரவு நேரத்தில் ஏழுமலை, ஐவதுகுடி கிராமத்திற்கு திருடுவதற்காக வந்துள்ளார். அந்த ஊரில் உள்ள வீரமுத்து மனைவி, பழனியம்மாள் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து ஏழுமலை திருட முயற்சி செய்யும்போது, கடா முடா சத்தம் கேட்ட பழனியம்மாள் விழித்துக் கொண்டார். அவர் திருடன்..... திருடன்..... என்று சத்தம் போட்டுள்ளார். 

இதனால் பயந்துபோன ஏழுமலை வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். பழனியம்மாள் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து திருடனை துரத்தியுள்ளனர். ஆனால் திருடன் ஏழுமலை காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி விட்டார். இந்த நிலையில் அவர் தப்பி ஓடிய வழியில் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் தனது விவசாய நிலத்தில் மரவள்ளி பயிறு செய்திருந்தார் அதை வனவிலங்குகள் அழித்துவிடும் என்பதால் அந்த பயிரை பாதுகாக்க நிலத்தைச் சுற்றி இரவில் மின் வேலி போட்டு இருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடிய ஏழுமலை, மின்வேலியில் சிக்கி உயிரழுந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து திட்டக்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் ஏழுமலை குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ஏழுமலை உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.