Skip to main content

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

election arrangement tamilnadu chief election officer pressmeet


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (06/04/2021) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, "தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடைபெறுகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் கடைசி ஒருமணி நேரத்தில் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் பயன்படுத்தப்படும். 4,17,521 பணியாளர்கள் நாளை சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடுவர். தமிழகத்தில் நேற்று (04/04/2021) மாலை 03.00 மணிவரை ரூபாய் 428.46 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், உரிய ஆவணத்துடன் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் அதிக தேர்தல் விதிமீறல் புகார்கள் வந்துள்ளன. 'சி விஜில்' (cVIGIL) செயலி மூலம் கரூர் தொகுதியில் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன. 

 

பணப்பட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது பற்றி ஆணையமே முடிவெடுக்கும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,58,263 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்". இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கி தொழில்நுட்பக் குழுவைப் பாராட்டித் தள்ளிய திரிஷா

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Trisha praise Raangi technical team

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது..

 

“ஒரு நடிகையாக நான் நடித்து முடித்து போய்விடுவேன். அதற்குப் பிறகு இந்தப் படம் வெளிவர உழைப்பது தொழில்நுட்பக் குழு தான். அவர்களுக்கு என் வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் தான் ஒரு படம் சிறப்பாக அமைய முக்கியக் காரணமாகும். படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் இவர்களை வேலை வாங்குகிற இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம்.

 

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. நீங்க வாங்க, நாம பார்த்துக்கலாம் என்று தைரியமாக களம் இறக்கியவர் அவர்தான். ஸ்பாட்ல போயி தான் ரிகர்சலே பண்ணுவோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தராமல் ரொம்ப ஜாலியாக இருந்ததற்கு காரணமே படப்பிடிப்பின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள் தான். இந்த நிகழ்விற்கு பல உதவி இயக்குநர்கள் வரல. ஆனால், பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு அர்ப்பணிப்பு நிறைந்தது.” என்றெல்லாம் பாராட்டினார்.


 

Next Story

"இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்தி..." - நடிகர் கமல்ஹாசன்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

"Even if I have a small cough, I have big news..."- Actor Kamal Haasan Anguish!

 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'DSP' திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (25/11/2022) நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், "சகோதரர் விஜய் சேதுபதியின்  'DSP'-க்காக இங்கு வந்திருக்கேன். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள். ட்ரைலர் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்துச்சி. விழாவின் போது சொன்னேன், முன்பெல்லாம் பெரிய விபத்து நேரும் போது கூட, அடுத்து எப்ப ஷூட்டிங் வரீங்கனு கேட்பாங்க. அடுத்தப் படம் எப்ப ரிலீஸ்னு கேட்பாங்க.

 

இப்ப சின்ன இருமல்னா கூட, எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்துட்டு இருக்கு. அதற்குக் காரணம் ஒன்று ஊடகம், மற்றொன்று பெருகியிருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். நன்றாக இருக்கிறேன். ‘இந்தியன் 2’ படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது" எனத் தெரிவித்தார்.