Skip to main content

'நிவர்' புயல் எதிரொலி... மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Echo of Nivar storm ... Medical consultation postponed!

 

நாளை நடைபெறவிருந்த மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. நாளை தீவிரப் புயலாகவும் மாறி வடமேற்குத் திசையில் நகர்ந்து, தற்போதைய நிலவரப்படி, வரும் 25 ஆம் தேதி பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்தில் 26 -ஆம் தேதி வரை, மழை நீடிக்கும். அதேபோல் புயல் கரையைக் கடக்கும் பொழுது 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்பொழுது மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு, 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நாளை நடைபெறவிருந்த கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் தக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'நிவர்' புயல் காரணமாகப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் மாணவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு தேதி மாற்றம் குறித்த தகவல்கள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

குளியலறையில் ரகசிய கேமரா; வசமாக சிக்கிய மருத்துவ மாணவர்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
A medical student caught in the lurch at Hidden camera in the bathroom

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (36). இவர் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவரது வீட்டில் ஒரு தம்பதியினர் வாடகைக்கு குடி வந்துள்ளனர்.  

அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து, அந்த பெண் குளிக்கும் போது வீடியோ எடுப்பதற்காக குளியலறை அருகே ஸ்பை பெண் என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், குளியல் அறையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பேனா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார். அப்போது அது உளவுக்கருவி என்பதும் அதில் கேமரா இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.

உடனடியாக, இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன், ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், முதுநிலை மருத்துவ மாணவர் இப்ராஹிம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். குளியலறையில், ரகசிய கேமரா வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.