Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி: ஆட்சியர் உத்தரவால் குடும்ப பாரம் சுமந்த மாணவிக்கு உதவி செய்ய களமிறங்கிய அதிகாரிகள்!!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

Echo of Nakkeeran news ... The officers who set out to help the student who was carrying the burden of the family by the order of the Collector

 

“கதவு வச்ச வீடும், டிகிரி படிக்க உதவியும் கிடைத்தால் போதும் அண்ணா.. மனநலம் பாதிச்ச அம்மாவை காப்பாத்திடுவேன் -பள்ளி வயதில் பாரம் சுமக்கும் சிறுமி!!" என்ற தலைப்பில் செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை நக்கீரன் இணையத்தில் சிறப்பு செய்தியும், வீடியோவும் பதவிட்டிருந்தோம்.

இந்தச் செய்தியில் சிறுமி சத்தியா மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வரும் 'மக்கள்பாதை' ஒருங்கிணைப்பாளர்கள் மொபைல் எண்ணும் இணைத்திருந்தோம். செய்தி வெளியான சற்று நேரத்தில் தொடங்கி, அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களின் ஏராளமான அழைப்புகள் வந்து திணறடித்துவிட்டது.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் சிறுமி சத்தியாவின் நிலை குறித்து சொன்னதோடு அரசு உதவிகள் கிடைக்க ஆவண செய்யவும் கேட்டிருந்தோம். நிச்சயமாக உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்த ஆட்சியர், உடனடியாகச் சிறுமிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு வீடு கிடைக்க வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.

 

Echo of Nakkeeran news ... The officers who set out to help the student who was carrying the burden of the family by the order of the Collector


ஆட்சியரின் உத்தரவுப்படி இன்று செப்டம்பர் 4 ஆம் தேதி காலை வருவாய்த் துறை அதிகாரிகள் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போராம் கிராமத்திற்குச் சென்று சிறுமி சத்தியா மற்றும் மனநலம் பாதித்த அவரது தாயார் வசிக்கும் மண் குடிசைப் பகுதியை ஆய்வு செய்தனர். ஆய்வில், அது மேய்ச்சல் நிலம் எனத் தெரியவந்தது. அதனால், அந்த இடத்தில் வீட்டுமனைப் பட்டா கொடுக்க முடியாது. எனவே, மாற்று இடத்தில் மனை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அரசு வீடு வழங்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டது.

மேலும் நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்து சிறுமி படித்த பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் வந்து மாணவிக்கு ஆறுதல் சொன்னதுடன் சிறு உதவிகளும் செய்தனர். திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நவீன கழிவறை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது. இந்த நிகழ்வுகள் நடக்கும் போது 'மக்கள் பாதை' அமைப்பினர் சத்தியாவிற்கு துணையாக இருந்தனர். 

மாவட்ட  ஆட்சியர் உறுதி அளித்தது போலவே, அனைத்து அரசு உதவிகளும் கிடைத்து வருவதைப் பார்த்து சிறுமி சத்தியா மற்றும் 'மக்கள் பாதை' அமைப்பினர் ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் மற்றும் உதவிகள் செய்ய முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர். நக்கீரன் சார்பிலும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்வோம்.

 

Ad

 


திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமைகளில் வீட்டுமனைப் பட்டா சிறுமி சத்தியாவிற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பலரது உதவிகளும் வீடு கட்டும் பணிகளும் தொடங்கலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.