Skip to main content

அதிகாலை விபத்து 7 பெண்கள் பலி! 

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Early morning accident 7 women passes away

 

ஆம்பூர் ஓணாங்குட்டை பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் சிலர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த அந்த வேன் இன்று விடியற்காலை பழுதாகியது. இதனால் வேனில் பயணித்தவர்கள் அதிலிருந்து இறங்கி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் தடுப்பில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது வேனின் பின்பக்கத்தில் லாரி ஒன்று வந்து மோதியது. மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்துள்ளது. இதில் சாலையின் சென்டர் மீடியன் தடுப்பு மீது அமர்ந்திருந்த பெண்கள் மீது வேன் கவிழ்ந்தது. 

 

இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் கல்லூரி பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் அட்டகாசம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

youth dance in road, blocking the Girls College bus

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் வந்து செல்ல கல்லூரி நிர்வாகமே பேருந்துகளை இயக்கி வருகிறது. 

 

இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடிந்து மாடப்பள்ளி பகுதி சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தி செல்போனில் குத்து பாடல்களை போட்டு நடனம் ஆடினர். பேருந்தை அங்கிருந்து செல்ல விடாமல் நிறுத்தி நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலர் இதனை கண்டும் காணாமல் சென்றனர். 

 

சிலர் இதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பரவ செய்துள்ளார்கள். இதனைப்பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியாகி, இந்த  இளைஞர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

 

 

Next Story

மாடுகளால் நிகழ்ந்த கோர விபத்து; ஒன்றன் பின் ஒன்றாக மோதிய 4 வாகனங்கள்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

4 vehicles collided one after the other

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமனம் என்ற பகுதியில் சாலையில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பெட்ரோல் ஏற்றி வந்த ஒரு லாரியானது வேகமாக வந்தது. அந்த பகுதியில் திடீரென சாலையை மாடுகள் வேகமாக கடந்தது. இதனால் லாரி உடனே பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. அப்போது வேகமாக பின்புறம் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக் கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டது.

 

இதில் விபத்தில் சிக்கிய கார் ஒன்று முழுமையாக நொறுங்கியது. காரை தொடர்ந்து வந்த இரண்டு அரசு பேருந்துகளும் மோதியது. கார் நொறுங்கி முழுமையாக சேதம் அடைந்த போதிலும், எந்த ஒரு உயிர்ச்சேதமும் இன்றி காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.