Skip to main content

ஊரடங்கு பணியிலிருக்கும் காவலர்களுக்குச் சொந்த செலவில் சிற்றுண்டி காய்கறி வாங்கிக் கொடுக்கும் டி.எஸ்.பி!

Published on 12/04/2020 | Edited on 13/04/2020


கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகப் போடப்பட்டுள்ள ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசார் காய்கறிகள் வாங்க வேண்டும் என்றால் பணிநேரத்தில் செல்ல வேண்டும். அப்படி செல்லாமல் பணியாற்றினால் சத்தான உணவைச் சாப்பிடும் நிலை தவிர்க்கப்படும். இதனையறிந்த கடலூர் டி.எஸ்.பி சாந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
 

 DSP to gave food at their own expense for curfews!

 

பணியில் இருக்கும் காவலர்களுக்கு தினமும் முகக் கவசம் வழங்குதல், கப சுர குடிநீர் வழங்குதல், காலை மாலை வேளைகளில் தேநீர் சினாக்சுடன் வழங்குதல் எனப் பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாகச் சொந்தச் செலவில் ஒரு வாரத்திற்குத் தேவையான  சத்தான காய்கறிகள் வாங்கி பணியில் இருக்கும் போலீசாருக்கு வழங்கினார். அத்தோடு காவலர்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் காய்கறிகள் பைகளை வழங்கினார்.

மேலும் கடலூரில் நேற்று மதியம் நிகழ்ச்சி நடைபெற்ற ஜவான்பவன் சிக்னலில் துண்டு, கைக்குட்டை அணிந்து வந்த பொதுமக்களுக்கு முகக் கவசங்களையும் அவரே அணிவித்து அனுப்பிவைத்தார்.
 

போலீசாருக்கு மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கூடுதலாக உணவுப் பொட்டலங்கள் வழங்கி பசியோடு வரும் முதியவர்கள், வழிப்போக்கர்களுக்கும் வழங்கவும்  அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை அதிகாரியின் கனிவான இச்செயல்களைக் காவலர்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.