Skip to main content

குடிபோதையில் 'நெருங்கிய' தந்தை; ஆட்டுக்கல்லால் அடித்துக்கொன்ற மகள்! சேலம் அருகே பரபரப்பு!!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

சேலம் அருகே, குடிபோதையில் பெற்ற மகளென்றும் பாராமல் தவறாக நடக்க முயன்ற தந்தையை, தற்காப்புக்காக ஆட்டுக்கல்லால் தாக்கி மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூர் ராஜாகோயில் வலவு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் படவெட்டி (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நளா (37). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

 

 Drunken 'close-up' father; Daughter beaten;near Salem

 

படவெட்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அதனால் அவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததால், அவருடைய மனைவி நளா, தன் இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனாலும், மாமியார் வீட்டுக்குச் சென்று அங்கேயும் படவெட்டி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுட்டு வந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை (பிப். 26) இரவு குடிபோதையில் மனைவியைப் பார்க்கச் சென்ற படவெட்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதோடு, அவரை வீட்டுக்குள் தள்ளி, கதவை வெளிப்புறமாக தாழிட்டார்.

பின்னர், வெளியே நின்றிருந்த தனது மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். குடிபோதையில் இருந்த தந்தையை கீழே தள்ளிய மகள், அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கினார். அதன் பின்னரும் மகளிடம் பலவந்தப்படுத்தினார். வேறுவழியின்றி அருகில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கி தந்தையின் தலை மீது போட்டார். இதில் படவெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன்பின், வீட்டுக்குள் அடைப்பட்டிருந்த தனது தாயை மீட்ட மூத்த மகள், ஜலகண்டாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நளா, அவருடைய இரு மகள்கள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட படவெட்டி, ஏற்கனவே சில முறை தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயற்சித்திருப்பது தெரிய வந்தது. சம்பவத்தன்றும், தன்னை பாதுகாத்துக் கொள்ளவே ஆட்டுக்கல்லை தூக்கி தந்தை தலையில் போட்டதாகக் கூறியுள்ளார்.

குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை, மகளாலேயே கொல்லப்பட்ட சம்பவம் ஆவடத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.