Skip to main content

“சிதம்பரம் நகருக்கு வக்கராமாரி ஏரியில் இருந்து குடிநீர்” - வேளாண் அமைச்சர் உறுதி

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

"Drinking water from Vakaramari lake to Chidambaram town" - Agriculture Minister confirmed

 

சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையை தமிழக வேளாண்மை மற்றும் ஊரக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலர்களுடன் உழவர் சந்தையில் சிதம்பரம் மேல வீதியில் இடநெருக்கடியால் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சிதம்பரம் நகரின் நீர் ஆதாரமாக விளங்கும் வக்கராமரி ஏரியை ஆய்வு செய்தார்.


பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “வக்கராமாரி  ஏரியில் இருந்து சிதம்பரம் நகருக்கு குடிநீர் எடுத்து செல்ல முடியாமல் இயந்திரங்கள் பழுதாகி கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தமிழக முதல்வர் ஆணையின் பேரில் தமிழக மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் வக்கராமாரி ஏரியில் இருந்து சிதம்பரத்திற்கு குடிநீர் எடுத்து செல்லும் வகையில் ரூ. 5 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும். 


சிதம்பரம் அண்ணாமலை நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ரூ. 328 கோடி  தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில் நவீன காய்கறி மார்க்கெட் அமைப்பதற்காக 5 கோடியே 70 லட்சம் செலவில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். 


உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிடிக்கப்படும் முதலைகள் இந்த ஏரியில் விடப்படுகிறது. இதனை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தனியாக முதலைப்பண்ணை ஒன்று அமைத்து அதில் முதலைகளை பாதுகாக்கப்படும். இது விரைவில் நடைபெறும்” என்றார். 


இவருடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கோட்டாட்சியர் ரவி, நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீனா, நகர்மன்ற தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட வருவாய் மற்றும் காவல்துறையினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.