Skip to main content

விதவிதமான வண்ணங்களில் வரும் குடிநீர்; அச்சத்தில் கரைப்புதூர்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Drinking water that comes in different colors;karaiputhur in fear

திருப்பூர் பகுதியில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் செந்நிறமாக வந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பே பல நேரங்களில் திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் நுரையுடன் பொங்கும் நீர் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் கழிவுநீரை வெளியேற்றுவதன் காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டு அடிக்கடி குடிநீர் மாசு கலந்து ரசாயன வாசனையுடன் குடிநீர் குழாய்களில் வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் தண்ணீர் மாசடைந்து மஞ்சள் நிறத்திலும், ஒரு சில இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்திலும் துர்நாற்றத்துடன் வந்த தண்ணீர் அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘டெல்லி மக்களுக்கு உதவ வேண்டும்’ - உ.பி, ஹரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் கடிதம்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Delhi Minister's Letter to Chief Ministers of UP, Haryana  for Water scarcity

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்து கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

அந்த வகையில், தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மேலும், டெல்லி குடிநீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டெல்லி முழுவதும் 200 குழுக்களை நியமித்து, குழாய்கள் மூலம் வாகனங்களைக் கழுவுவினாலும் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிந்தாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘டெல்லியில் கடுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியான சமயத்தில் டெல்லி மக்களுக்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநில அரசு கைகொடுக்க வேண்டும். மேலும், பருவமழை வரும் வரை ஒரு மாத காலத்திற்கு டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல்; போலீசார் அதிரடி!

Published on 26/05/2024 | Edited on 27/05/2024
Chennai Central Alappuzha Express Train Incident

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை அடைந்ததும் மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். இந்த இளைஞர் ரயிலில் புகைபிடித்தபடியும், சத்தமாகப் பாட்டு படியப்படியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த ரயில் பயணிகள் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் இது தொடர்பாக தட்டிக்கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள் பதிலுக்கு பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பயணிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் பெண் பயணி ஒருவரிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்று விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக 17 வயது சிறுவன் மற்றும் அசோக் (வயது 20) என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.