Skip to main content

300 கிராமங்களுக்கான குடிநீர்..! இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று ஆட்சியரிடம் மனு..!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

Drinking water for 300 villages ..! Going on a rally in a two wheeler and petitioning the Collector ..!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் தாலுகாவின் தாண்டிக்குடி, மங்களம்கொம்பு உட்பட பல்வேறு மலை கிராம பகுதியில் இருந்து கிடைக்கும் மழை நீர், மலை அடிவாரத்திலுள்ள கன்னிமார் கோவில் வழியாக வந்து குடகனாறு உற்பத்தியாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டம் வரை சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்கிறது.

 


இப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் இந்த நீரை பயன்படுத்திவந்தன. இப்பகுதி முழுவதும் நெல், வாழை, கரும்பு, தென்னை, பூக்கள் என விவசாயம் செய்யப்பட்டு வந்தது. அதேபோல், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் முன்னாள் முதல்வர் காமராஜரால் 1954ஆம் ஆண்டு குடகனாறு ஆற்றுப்படுகை அருகே காமராஜர் நீர்த்தேக்கம் என்ற நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.

 

இந்த நீர்த்தேக்கம் திண்டுக்கல் நகராட்சி மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக தற்போதுவரை விளங்குகிறது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக குடகனாறு ஆற்றுப்படுகையில் தண்ணீர் வரவில்லை. இதற்கு முக்கிய காரணமாக ஓடை அருகே ராஜ வாய்க்கால் என்ற பகுதியில் கான்கிரீட் சுவர் எழுப்பி தண்ணீருடன் ஆற்றுப்படுகையில் வரவிடாமல் மாற்றுப்பாதையில் விட்டதால்தான். 
 


கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக குடகனாறு ஆற்றுப்படுகையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டங்களை குடகனாறு மீட்பு குழு, பொதுமக்கள், விவசாயிகளை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். 
 


ராஜவாய்க்கால் வழியேச் சென்ற நீர், மாவட்ட நிர்வாகத்தால் கடந்த மாதம் திறக்கப்பட்டு, அனுமந்தராயன் கோட்டை, வக்கம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக தாடிக்கொம்பு வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி நீர்த்தேக்கம் வரை சென்றது. இந்நிலையில், மீண்டும் குடகனாறு ஆற்றில் தண்ணீர் அடைக்கப்பட்டதால் குடகனாறு மீட்புக்குழு, தண்ணீரை தொடர்ந்து திறந்துவிட வேண்டும். 

 

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலன கிராமங்களும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் இந்நீரைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, மீண்டும் எந்த ஒரு தங்குத் தடங்கலும் இல்லாமல் பொதுமக்கள், விவசாயிகள் வாழ்வா தாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தண்ணீரை திறந்துவிட வேண்டும். ராஜ வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர், சுமார் 16 கிராமங்கள் விவசாயிகள் பயன்படுத்திய பின்பு, வைகை ஆற்றில் போய் சேருகிறது. குடகனாற்றிலிருந்து, 300க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயன் பெறுகின்றனர். 

 

Drinking water for 300 villages ..! Going on a rally in a two wheeler and petitioning the Collector ..!


ஆகவே, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தண்ணீரை தொடர்ந்து திறந்து விடக்கோரியும் கூம்பூர் அழகாபுரி குடகனாறு அணையில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காமராஜர் நீர்த்தேக்கம் வரை பேரணியாக சென்று திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.