Skip to main content

பெண்களைக் கல்வி பயிலச் செய்ததுதான் திராவிட மாடல்; அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

The Dravidian model was to educate women; Minister Ponmudi's speech

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய அரசர் முத்தையாவேள் ஆய்வரங்கம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமை தாங்கினார். தமிழியல் துறைத் தலைவர் அரங்க பாரி அனைவரையும் வரவேற்றார். 

 

சிறப்பு அழைப்பாளராகப் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துகொண்டு பேசுகையில், “இந்தக் கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு நான் பயிலும்போது கடலூர், விழுப்புரம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திற்கே ஒரே ஒரு கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழகம் தான். ஆனால் தற்போது ஊருக்கு ஒரு கல்லூரி வந்துவிட்டது. இந்தக் கல்லூரியில் அப்போது ஆண்கள் 100 பேர் கல்வி பயின்றால் பெண்கள் 10 பேர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் தற்போது ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகக் கல்வி கற்கிறார்கள் எனவே இதுதான் திராவிட மாடல்.

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியார் மற்றும் முத்தையா செட்டியார் தமிழை வளர்க்க அரும்பாடு பட்டு வளர்த்துள்ளனர். கல்வி பாட புத்தகங்களை தமிழில் மாற்றியவர் அண்ணா. அதன் பிறகு தமிழைப் படித்தால் ஊக்கத்தொகை ரூ.500 வழங்கியவர் கலைஞர். தமிழக முதல்வர் ஸ்டாலின் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கல்லூரி மற்றும் விடுதி கட்டணம் இல்லை என்றும் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கி வருகிறார்.  இதனால் இந்த ஆண்டு 29 சதவீதம் பெண்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர்” என்றார்.

 

வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றான்டு விழா தொடங்குகிறது. இதனையொட்டி பல்கலைக்கழகத்தில் கலைஞர் இருக்கை அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக அமைச்சர் பேசுவதற்கு முன் பல்கலைக்கழக மாணவ மாணவிகளைப் பேசக் கூறினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த ஆண்டேரிதனிஷ்கா, மாணவர்கள் மாதேஸ்வரன், ராஜதுரை பேசினார்கள். இதனை அமைச்சர் கூர்ந்து கவனித்து மாணவர்களைப் பாராட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குச் சான்றுகளை வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

 Star status for Annamalai University

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கல்வித்துறை (3.5) நட்சத்திர மதிப்பீட்டை, 70.81 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

 

இது முந்தைய ஆண்டு பெற்ற (0.5) நட்சத்திர மதிப்பீட்டில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் இந்த மதிப்பெண்ணை எட்டுவது இதுவே முதல்முறை.  இதன்படி தமிழ்நாட்டின் 2வது அதிக புதுமை கண்டுபிடிப்பு செயல்திறன் மிக்க அரசு பல்கலைக்கழகமாக மாறி உள்ளது.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் ஐஐசி அமைப்பு புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இது அமைந்துள்ளது. ஆராய்ச்சி அறிஞர்கள் மாணவர்களிடையே புதுமையான ஆராய்ச்சி சிந்தனை, தொழில் முனைவு, திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஐஐசியின் செயல்பாடுகள் அதிகரித்தன.

 

மேலும் சிதம்பரம் பகுதியில் பள்ளிகளின் அடல் ஆய்வகங்களின் ஒருங்கிணைப்பு மூலம் சேவைகளை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சியானது தமிழகம் முழுவதும் புதிய முயற்சி, தொழில் முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாதனை படைத்த ஐஐசி குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களுக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

vck sruggle against Annamalai University


சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தலைமை தாங்கினார். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ்மொழி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.  மாவட்ட செயலாளர் மணவாளன் அனைவரையும் வரவேற்றார்.

 

கடலூர் மாநகர் மன்ற துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி, நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் செல்லப்பன், மண்டல துணை செயலாளர் ஐயாயிரம்,  மாவட்ட செயலாளர்கள் நீதி வள்ளல், அறிவுடை நம்பி, செந்தில், திராவிட மணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எஸ்சி எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் 2 விழுக்காடுகள் மட்டுமே உள்ளனர்.  சமூகநீதி என்ற கொள்கையின் செயல் வடிவமே இட ஒதுக்கீடு, இந்த இட ஒதுக்கீட்டை புதை குழியில் போடுவதை எதுவரை சகிக்க முடியும்.  சில தளங்களில் நிர்வாக தலைமையின் சிறிய ஆளுமை வெளிப்படுகிறது.  சில தளங்களில் கண்டும் காணாத பொறுப்பற்ற போக்கு தொடர்கிறது.

 

அரசு பல்கலைக்கழகத்தை முழு கட்டுப்பாட்டிற்கு எடுத்த போது நிதிச் சிக்கலை மட்டுமே கணக்கிட்டுள்ளனர். ஆனால் அதில் இட ஒதுக்கீட்டை கருதவில்லை. இதனால் கடைசியாக பணியில் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் தற்போது 2 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரம் கேட்டும் இதுவரை தரவில்லை. அதேபோல் 10 ஆண்டுகளாக நிலவையில் உள்ள 205 தொகுப்பு ஊதிய பணியாளர்களையும் என் எம் ஆர் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வு ஊதிய ஒப்படைப்பு தொகை, பணிக்கொடை,7-வது ஊதிய குழு நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து பண பலன்களையும் உடனே வழங்க ஆவண செய்ய வேண்டும்.

 

எஸ்சி, எஸ்டி, எம்பிசி காலி பணியிடங்களை உடனே நிரப்பிட ஆவண செய்ய வேண்டும்.  நிர்வாகம் இட ஒதுக்கீட்டை செம்மைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சிறப்பு ஆட்சி மன்ற குழுவை கூட்டி மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து பல்கலைக்கழகத்தை மீண்டும் சீர்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.