Skip to main content

'மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை கொண்டு வந்ததே திராவிட மாடல்' - அன்புமணி விமர்சனம்!

Published on 17/09/2022 | Edited on 18/09/2022

 

'The Dravida model is brought as you can't live without alcohol' - PMK Anbumani review!

 

மது இல்லாமல் இருக்க முடியாது என்ற அளவிற்கு கொண்டு வந்ததே திராவிட மாடல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''இந்த தலைமுறையை நாம் ஒன்னும் பண்ண முடியாது. அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றி ஆகணும். இந்த தலைமுறை மது இல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு திராவிட மாடல் கொண்டு வந்து விட்டது. போதை எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. கஞ்சா எண்ணெய்யாக கிடைக்கிறது, சாக்லேட்டா கிடைக்கிறது, பிஸ்கட்டாக கிடைக்கிறது, பேப்பராக கிடைக்கிறது, ஸ்டாம்பாக கிடைக்கிறது, பொட்டலமாகக் கிடைக்கிறது, அபின், கோக்கின், ஹெராயின் எல்லாமே இங்க கிடைத்துக் கொண்டிருக்கிறது. போதையை ஒழிக்க தனியாக அமைப்பு இருக்கு ஆனால் அதில் போதுமான காவலர்கள் இல்லை. என்னுடைய கணக்குப்படி புதியதாக 20000 காவலர்கள் அதில் நியமனம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது இருப்பது 800 பேரோ, 500 பேரோ இருக்கிறார்கள். அது போதுமானது கிடையாது. 20 ஆயிரம் பேரை நியமனம் செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதை ஒழிக்க முடியும்.

 

ஏனென்றால் யார் விற்கிறார்கள் என்று காவல்துறைக்கு தெரியும். காவல்துறை விற்பவர்களை மட்டும் தான் பிடிக்கிறார்கள். உங்களுக்கு யார் கொடுத்தார்கள்,  உங்களுக்கு சப்ளை செய்வது யார், அதனுடைய தலைவர் யார், எங்கிருக்கிறார், எங்கிருந்து இதெல்லாம் வருகிறது என்பதை எல்லாம் விசாரணை செய்து சரியான முறையில் யாரையும் கைது செய்யவில்லை. நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது போதுமானது கிடையாது. உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் போட்டு எங்கிருந்து சோர்ஸ் வருகிறதோ அந்த சோர்ஸ்-ஐ கட் பண்ண வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.