Skip to main content

கமல்ஹாசன் பிறந்தநாளுக்காக அரங்கேற்றப்பட்ட மேடை நாடகம்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

drama play staged for Kamal Haasan's birthday

 

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாள் நாளை (7.11.2021) தேதி கொண்டாடப்படுகிறது. இதனை வெகு விமரிசையாக கொண்டாட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி நவம்பர் 1 முதல் அவரின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் 7 லட்சம் பேருக்கு ‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்ற பெயரில் அன்னதானம் வழங்கிவருகின்றனர்.

 

இதனை அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து ஒன்பது வாகனங்களில் சுமார் ஏழாயிரம் பேருக்கான உணவை வழங்கிடும் பயணத்தைக் கமல்ஹாசன் கொடியசைத்து துவக்கிவைத்தார். அதேபோல் நடிகர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மனமகிழ் மன்றம் சார்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள சத்குரு ஞானானந்தா அரங்கில் 'வினோதய சித்தம்' என்ற நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை நேரில் பார்த்து, நாடகத்தில் நடித்த கலைஞர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 

பின்னர் பேசிய அவர், “சென்னையில் அனைத்து வசதிகளும் அடங்கிய அற்புதமான நாடக அரங்கத்தை உருவாக்க உள்ளேன். ஒத்திகை இல்லாத துறையாக சினிமா இருப்பது வேதனையாக இருக்கிறது. நான் எடுக்கும் படத்தை 150 முதல் 170 தடவை வரை பார்த்து மெருகேத்துவேன். அதேபோல் அதனை திகட்டும் வரை பார்ப்பேன். தற்போது இருக்கும் காலத்தில் யூடியுப் வழியாக நாடகங்களைப் பார்ப்பதைவிட நேரடியாக வந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.