Skip to main content

''இங்கே செய்தி எடுக்கக் கூடாது...''  செய்தியாளரை தாக்கிய எஸ்.ஐ... கொந்தளிக்கும் பத்திரிகையாளர்கள்!

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

"பத்திரிகையாளர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதில் எங்களை மிஞ்ச யாருமில்லை "என்பதனை உணர்த்தும் விதமாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரின் செவிப்பறையை கிழித்து, பூட்ஸ் காலால் ஏறி மிதித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார் எஸ்.ஐ.ஒருவர். காவல்துறையின் உயரதிகாரிகள் மௌனம் காத்த வேளையில், எஸ்.ஐ.யின் காட்டுமிராண்டி செயலைக் கண்டித்து ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

 

 '' Don't take the news here ... '' SI attacking reporter ... turbulent journalists!

 

 '' Don't take the news here ... '' SI attacking reporter ... turbulent journalists!

 

திருநெல்வேலி மாவட்டம் கடையம் எழில்நகரை சேர்ந்தவர் பாரதிராஜன். இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார். பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஒருவனிடம் போலீசார் டீல் பேசுவதாக தகவல் வர, மற்றொரு நாளிதழ் செய்தியாளருடன் இணைந்து செய்தி சேகரிப்பதற்காக கடந்த வியாழனன்று மதியம் 3 மணி வாக்கில்  காவல்நிலையம் அருகில் சென்றிருக்கின்றார். தகவல் கூறிய சோர்ஸூடன் செய்தியாளர் பாரதிராஜன் பேசிக்கொண்டிருந்ததை அறிந்த காவல்நிலைய எஸ்.ஐ.சின்னத்துரை,"என்ன இங்க நிற்கீறீங்க இங்கே எல்லாம் நிற்கக் கூடாது  இடத்தை காலி செய்யுங்க..!" என எடுத்த எடுப்பிலேயே எகிற, செய்தியாளரும் தான் இன்னார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, " செய்தி சேகரிக்க இங்கு வந்துள்ளேன்.!" என்பதனை விளக்கிக் கூற, " செய்தி சேகரிக்க இங்க வரக்கூடாதுல." என எஸ்.ஐ.கோபத்தில் குதிக்க, " ஏன் சார்..? செய்தி சேகரிக்கக் கூடாது என சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரமில்லை." எனப் பதிலுக்கு செய்தியாளர் கூறியது தான் தாமதம் அவருடைய செவிப்பறையில் ஓங்கி அறைந்தவர், " எதிர்த்துப் பேசுகிறீயா.?" எனக் கேட்டுக்கொண்டே உதைத்து தள்ளியவர் பூட்ஸ் காலால் ஏறியும் மிதித்துள்ளார் எஸ்.ஐ.சின்னத்துரை. அத்துடன் விடாமல் செய்தியாளரை தரத்தரவென இழுத்து காவல் நிலையத்திற்குள் கூட்டி சென்று அங்கேயும் தாக்கியுள்ளார் அவர். தகவலறிந்த பத்திரிகையாளர்கள் ஒன்று சேர இரவு எட்டுமணிக்குப் பிறகே விடுவிக்கப்பட்டுள்ளார் செய்தியாளர் பாரதிராஜன்.

 

 '' Don't take the news here ... '' SI attacking reporter ... turbulent journalists!

 

காவல்துறையினர் தாக்கியதில் காயம் அதிகம் ஏற்பட்ட நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் செய்தியாளர் பாரதிராஜன். இதேவேளையில், நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து, நடந்த சம்பவங்களை தீர விசாரித்து சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.சின்னத்துரை மீது வழக்குப்பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்ட காவல்துறை.

 

 '' Don't take the news here ... '' SI attacking reporter ... turbulent journalists!

 

இது இப்படியிருக்க, செவிப்பறை பலமாக தாக்கப்பட்டு, கேட்கும் திறன் குறைந்துள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாக ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.