Skip to main content

வன விலங்குகள், நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் பசுமை சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுகிறதா? மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
ew

 

வன விலங்குகள் மற்றும் நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல் சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

எட்டு வழி சாலைக்கு  நிலம் கையகப்படுத்தும் முன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சேலம் முதல் சென்னை இடையிலான மாவட்டங்களில் ஏற்கனவே நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ள நிலையில், காடுகளை அழித்து தார் சாலை அமைத்தால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என வாதத்தை முன்வைத்தார்.

 

அப்போது அரசு தரப்பில் ஆஜராகி தலைமை வழக்கறிஞர் சென்னை சேலம் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து நேற்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

அப்போது குறுக்கிட்டு மனுதாரர் சூரியபிரகாசம் சாலை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும், ஆனால் இயற்கை வளங்கள், வன விலங்குகள், நீர் நிலைகளை கையகப்படுத்தி திட்டம் நிறைவேற்றப்படக்கூடாது எனபதாலேயே வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

 

அதை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

மேலும், புதுக்கோட்டையில் நீர்நிலைகளின் குறுக்கே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பான மேல்முறையீடு வழக்குடன் இதை இணைத்து பட்டியலிடுவதாகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இரு வழக்குகளும் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது குறித்து விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

இப்படியெல்லாம் கூட ஒரு மோசடியா? - சென்ட்ரலில் இளைஞரை பிடித்ததில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

 Is all this a scam?- Shocking information revealed when a young man was caught standing with a notepad and stamps in Central

 

பண்டிகை தினங்களில் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வட இந்திய இளைஞர்களைக் குறி வைத்து, இளைஞர் ஒருவர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் போலி ரயில் டிக்கெட் கொடுத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வடமாநிலத் தொழிலாளர்கள் பண்டிகை நாட்களில் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிவார்கள். அந்த நேரத்தில் பலரது டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும். அப்படி வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் நபர்களைக் குறிவைத்து உங்களுக்கு சீட்டை கன்ஃபார்ம் பண்ணித் தருகிறேன் எனக்கூறி ஒருவர் மோசடி செய்துள்ளார்.

 

நேற்று மதியம் சென்ட்ரல் புறநகர் முன்பதிவு மையம் பகுதியில் கையில் நோட்பேட், ரப்பர் ஸ்டாம்ப் உடன் நின்ற இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஜா என்று தெரியவந்தது. அவருக்கு இந்தி தெரியும் என்பதால் வட மாநிலப் பயணிகளைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். கொடுங்கையூரில் வசித்து வரும் அவரின் வீட்டுக்குச் சென்ற ரயில்வே போலீசார் ஆய்வு செய்ததில் பல ரப்பர் ஸ்டாம்புகள் நோட் பேட் ஆகியவற்றைப் பார்த்து அதிர்ந்தனர்.

 

 Is all this a scam?- Shocking information revealed when a young man was caught standing with a notepad and stamps in Central

 

அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ட்ரெயின் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் தவிக்கும் வட மாநில இளைஞர்களைக் குறி வைத்து, தான் ரயில்வே துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொள்வதோடு, துண்டு பேப்பரில் பயணிகளின் பெயர், விவரம், வயது, ரயிலின் பெயர், சீட்டின் எண் ஆகியவற்றை மருத்துவர் மருந்து சீட்டில் எழுதுவதுபோல எழுதி எக்ஸிக்யூட்டிவ் ஆபிஸர் ஆந்திரா என்ற ஒரு சீலை வைத்துக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விடுவார். இதை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் உங்களுடைய சீட்டு உறுதியாகிவிடும் என அனுப்பி விடுவார். இதற்கான பணத்தையும் பெற்றுக் கொள்வார்.

 

ஆனால், இப்படிச் செல்லும் அப்பாவிப் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் இதைக் காட்டினால், இது செல்லாது, போலியானது என ரயிலிலிருந்து இறக்கி விடப்படுவர். இது தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.