Skip to main content

பெண் காவலரின் துணிச்சலை பாராட்டி பரிசளித்த டாக்டர்கள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Doctors who appreciated the bravery of the female policeman

 

செல்ஃபோன் பறித்துச் சென்ற ரவுடியை விரட்டிப் பிடித்த கர்ப்பிணி பெண் காவலரின் துணிச்சலையும், கடமை உணர்வையும் பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்கள் சூர்யா மருத்துவமனை டாக்டர்கள். அந்தப் பெண் காவலருக்கு உயரதிகாரிகளின் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

 

சென்னை பேசின் பாலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் சுசீலா. இவர்  கடந்த 24-ந் தேதி பேசின் பாலம் ரயில் நிலையத்திலிருந்து காவல் நிலையத்துக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். காவல் நிலையம் அருகே பேருந்து சென்றபோது பேருந்தில் இருந்த ஒருவர் தனது மொபைல் ஃபோன்  திருடப்பட்டு விட்டதாகக் கதறினார். இதைப் பார்த்த பெண் காவலர் சுசீலா, பேருந்தில் பயணம் செய்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படி இருந்த இரண்டு  நபர்களைப் பிடித்து விசாரித்தார். அப்போது, பெண் காவலர் சுசீலாவை தள்ளிவிட்டு ஒருவர் தப்பியோடினார்.

 

மற்றொருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்த பெண் காவலர் சுசீலா, பேசின் பாலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும், சுசீலா நடத்திய விசாரணையில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டது புளியந்தோப்பு திருவிக நகரைச் சோ்ந்த 36 வயதுடைய ஜாபா் ஷெரீப்  என்பது தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே 6 குற்ற வழக்குகள் இருப்பதும்  தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட ரவுடியை  விரட்டிப் பிடித்த மூன்று மாத கர்ப்பிணியான சுசீலாவின் துணிச்சலை மக்கள் வியந்து பார்த்தனர். இந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்தும் தனது கடமையை மறக்காத பெண் காவலர் சுசீலாவின் தைரியத்தை பாராட்டி  1 லட்சம் ரூபாய் பரிசளித்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமார். இந்தப் பரிசளிப்பு நிகழ்வில் காவல்துறையின் டெபுடி கமிஷனர், சூர்யா மருத்துவமனையின் டாக்டர்கள் அனந்தகுமார், ராஜீவ் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பரிசளித்து பாராட்டிய டாக்டர் ஸ்ரீகுமார், "உங்களின் துணிச்சல் மற்றவர்களுக்கும் ஒரு ஊக்க சக்தி" என்று வாழ்த்தினார். இந்த நிலையில், சுசீலாவை  காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.