Skip to main content

''நகராட்சிக்கு இடத்தை விற்பனை செய்யாதே''-தொழிலதிபரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏகஸ்பா என்கிற பகுதியில் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பகுதி முழுவதும் அடித்தட்டு, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாகும், இந்த பகுதியில் அமைவதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும், அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 Do not sell land to municipalities - civilians who blocked businessman's house


அதனையும் மீறி நகராட்சி நிர்வாகம், தங்களுக்கு அங்கு சொந்தமாக இடம்மில்லாத நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன்லால் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கள் பகுதியில் உள்ள லாலின் இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், வேறு எதற்காகவாவுது பயன்படுத்திக்கொள்ளுங்கள், வேறு யாருக்காவது விற்பனை செய்யுங்கள், நகராட்சிக்கு விற்பனை செய்யாதீர்கள் என ஏகஸ்பா பகுதி பெண்கள் பலர், லால் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதுப்பற்றி போலீஸாருக்கு தகவல் செல்ல, அவர்கள் வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர். லால் சார்பாக பொதுமக்களிடம் பேசியவர்கள், அவர் இடத்தினை விற்கவில்லை, நகராட்சி நிர்வாகம் தான் வலுக்கட்டாயமாக கேட்கிறது என தகவலை கூறியபின்பு மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.

பொதுமக்களின் எதிர்ப்பால் நான் இடத்தினை விற்பனை செய்ய விரும்பவில்லையென நகராட்சி அதிகாரிகளிடம் லால் சொல்ல, அவரை சமாதானப்படுத்தி இடத்தினை வாங்கும் பணியில் தீவிரமாக உள்ளனர் அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.