Skip to main content

“இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள்” - இராணுவ ஆள்சேர்ப்பு குறித்து கலெக்டர் அறிவிப்பு

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

"Do not be fooled by intermediaries" - Collector's announcement on military recruitment

 

திருவண்ணாமலையில் 10.02.2021 முதல் 26.02.2021 வரை இராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களிலிருந்தும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்தும், கடந்த ஆண்டு 01.03.2020 முதல் 31.03.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் 25,000 இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளார்கள். முகாமுக்கு வருபவர்களுக்குப் பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் கௌரவ் சேத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருவண்ணாமலையில் வரும் 10.02.2021 முதல் திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிருந்து விண்ணப்பித்துள்ள 25,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குநர், காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்துக் கழகம் உட்பட பல்வேறு துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கும், முகாம் நடைபெறும் கல்லூரிக்குத் தேவையான போக்குவரத்து வசதி, குறைந்த விலையில் உணவகம், தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவது குறித்தும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அப்படி யாராவது இடைத்தரகர்கள், தனி நபர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என அணுகினால், உடனாடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இதற்கான விழிப்புணர்வு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலையில் நடைபெறும் சிறப்பான இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர், தொழில்நுட்பம், சிப்பாய் பொது பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 

விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், குடியுரிமை, சாதி மற்றும் பிறப்பு ஆகிய சான்றிதழ்கள், அசல் மற்றும் நகலுடன் முகாம் நடைபெறும் நாள் அன்று கொண்டு வர வேண்டும். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்பவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இதில், 1.6 கி.மீ. தூரம் ஒட்டப்பந்தயம், 9அடி கால்வாய் தாவுதல் என உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து உடல் அளவீடுகளுக்கான தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

 

இம்முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், அவர்களுக்கான அனுமதி அட்டையை ஜனவரி 25-ம் தேதி முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுமதி அட்டை அனுப்பப்படும். தமிழ்நாடு அரசின் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகாமில் கலந்துகொள்வதற்கு தினமும் 2,000 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் 4 நாட்களுக்கு முன்பு கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவு சான்றிதழ், அனுமதி அட்டையுடன் வர வேண்டும். முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளலாம். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான அனுமதி அட்டை இதர விவரங்கள் குறித்த தகவல்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் 25.01.2021 முதல் வெளியிடப்படும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பத்தவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படும். மேலும் விரவங்களுக்கு 044 – 25674924, 25674925 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.


இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இராணுவ ஆள்சேர்ப்பு செயல்முறை, முழுமையாக தானியங்கி செயல்பாடாகும். இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உடல்தகுதி, மருத்துவ மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு யாரும் உதவி செய்ய முடியாது. இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்களின் கடினமான உழைப்பினால் மட்டுமே தேர்வாக முடியும். திருவண்ணாமலையில் நடைபெறும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள், சென்னை மண்டல இராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் மூலம் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வு குறித்த தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.