Skip to main content

“இது திமுக; ஜல்சா கட்சி கிடையாது” - வானதி எம்.எல்.ஏக்கு பதிலடி தந்த பெண்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

DMK Woman comment to Vanathi Srinivasan MLA's Latest speech

 

திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் இந்த வருடம் முழுக்கக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், வடசென்னை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த கலைஞர்100 கொண்டாட்டக் கூட்டத்தில் பேசிய அன்றைய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்பு குறித்து சில அவதூறு கருத்துக்களைத் தெரிவித்தார்.

 

குஷ்பு குறித்து சர்ச்சை பேச்சு; சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

 

இதற்கு குஷ்பு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும், கைது செய்யப்பட்டார். 

 

இந்நிலையில், சமீபத்தில் கோவையில் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பற்றி மிகவும் தரக்குறைவான விதத்தில் பேசி இருந்தார். வானதி ஸ்ரீனிவாசனின் அந்த பேச்சில், ‘திமுக கவுன்சிலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள், மாலையில் ஒரு வீட்டில் இருப்பார்கள். அவர்கள் ஒரு வீட்டில் இருக்கமாட்டார்கள். திமுகவில் இதை ஒரு பண்பாடாகவே செய்து வருகிறார்கள்’ என்று மிக மோசமாகப் பேசி இருந்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பற்றிய இந்த ஆதாரமற்ற மலினமான பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழும்பியுள்ளன. 

 

DMK Woman comment to Vanathi Srinivasan MLA's Latest speech

 

‘ஒரு கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் சாதனைகளைப் பற்றி பேச வேண்டும். ஆனால், அந்த கட்சிக்கு என்று எந்த சாதனைகளும் இல்லை என்பதால் அந்த கட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கூட அடுத்த கட்சியைப் பற்றிய அவதூறை பேச வேண்டிய நிலைமை ஏற்படுகிறது’ என்று பாஜக வானதி ஸ்ரீனிவாசனுக்கு பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். 

 

DMK Woman comment to Vanathi Srinivasan MLA's Latest speech

 

அதேசமயம் திமுக ஆதரவாளர் ஒருவர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வானதி ஸ்ரீனிவாசனுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “எல்லாரையும் உங்களைப் போல் நினைத்துவிடக்கூடாது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக நீங்கள் என்ன போராட்டத்தை நடத்தினீர்கள். உங்கள் கட்சியில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், நீங்கள் முதல்வரை அணுகலாம். அவர் கண்டிப்பாக உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார். அதை விட்டுவிட்டு எங்கள் திமுக சகோதரர்கள் குறித்து இப்படி அவதூறு பரப்பினால் நிச்சயமாக அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது திமுக; ஜல்சா கட்சி கிடையாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்தியப் பிரதேச முதல்வராக விஷ்ணு மோகன் யாதவ் தேர்வு!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Vishnu Mohan Yadav chosen as Chief Minister of Madhya Pradesh

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த வகையில் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக சார்பில் மோகன் யாதவ் பதவியேற்க உள்ளார். போபாலில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான முந்தைய பாஜக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ் ஆவார். தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 3 முறை எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் துணை முதல்வர்களாக ஜெகதீஷ் தேவ்ரா, ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் மூன்று முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.