Skip to main content

20 லட்சம் பேருக்கு உணவு வழங்க திமுக தொடங்கிய திட்டம்! ஸ்டாலின் கலந்துரையாடல்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

 DMK plan to provide food for 20 lakhs people

 

திராவிட முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற, பல மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் ஆலோசகராக இருந்த, குறிப்பாக தற்போது பிரதமராக உள்ள பாஜக மோடியின் தேர்தல் ஆலோசகராக, இருந்த ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோரை, தங்களது கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்க நியமித்துள்ளது திமுக தலைமை.


அவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் கரோனா நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் மக்களோடு மக்களாக திமுக நிற்கவேண்டும், உதவ வேண்டும் என ஐபேக் நிறுவனம் ஒரு திட்டத்தினை வகுத்து தந்துள்ளது.

“ஒன்றிணைவோம் வா” என்கிற முழக்கத்தோடு முன்னெடுகப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, துன்பத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு முயற்சி, ஏப்ரல் 20 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி உதவி எண்ணை திமுக தலைமை அறிவித்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டால் உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உதவி மையம் (90730 90730) மூலம் உதவி கோரியுள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேருக்கு உதவி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 29ந்தேதி, “நல்லோர் கூடம் முன்முயற்சியை” என்கிற திட்டத்தை திமுக தலைவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது உதவி வழங்குபவர்களுடன் உதவி கோருபவர்களை இணைப்பதற்கான ஒரு மெய்நிகர் மன்றம், நல்லோர் கூடம், தனிநபர்கள், https://ondrinaivomvaa.in/nallorkoodam/ என்ற தளத்தில் நேரம், வளங்கள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் வட்டாரத்தில் உதவ பதிவு செய்யலாம். அவர்களுக்கு தேவை உள்ளவர்கள் பற்றிய பட்டியல் தந்து உதவி செய்யவைப்பது.

நல்லோர் கூடம் என்கிற மன்றத்தில் இணைந்த தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முதல் குழுவுடன், திமுக தலைவர் உரையாடினார். உரையாடலின்போது, தன்னார்வலர்களின் இரக்கமும் உறுதியும் ஒரு நெருக்கடியை நாம் ஒன்றாக சமாளிப்போம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

அதேபோல், ‘ஏழை எளியோருக்கு உணவு’ (Feed the Poor) ‘என்ற திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இது உடனடியாக உணவு தேவைப்படும் மக்களுக்கு, உணவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் திமுக தலைவர்கள், சமையலறைகள் மற்றும் அடிமட்ட உணவளிக்கும் கூட்டாளர்களின் நெட்வொர்க் மூலம் மாநிலத்தின் 25 நகரங்களில் 20 லட்சம் சமைத்த சத்தான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த செயல்பாடுகளை ஆளும்கட்சியும், பிற கட்சிகளும் உற்று நோக்க துவங்கியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.