Skip to main content

மாணவர்களுக்கு சைக்கிள் ஏன் தருகிறோம்? - சட்டமன்ற துணை கொறடா பிச்சாண்டி விளக்கம்!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆரணி தொகுதி எம்.எல்.ஏவும், இந்த சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர்.ராமச்சந்திரன் வழங்கினார். அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் எம்.எல்.ஏக்கள் வழங்கவருகிறார்கள்.

 

 DMK Pitchandi speech

 



அதன்படி கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள சு.வாளாவெட்டி ஊராட்சியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ – மாணவிகள் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டியை கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் துணை கொறடாவுமான பிச்சாண்டி எம்.எல்.ஏ வழங்கினார்.

மிதிவண்டி வழங்கும் முன் மாணவ – மாணவிகள் முன் பேசிய பிச்சாண்டி, "இந்த மாவட்டம் ஏழை மக்கள் நிரம்பிய மாவட்டம். ஒருக்காலத்தில் உணவுக்கு வழியில்லாமல் பள்ளிக்கூடம் பக்கம் போகாவதர்கள் இருந்தனர். திராவிட இயக்கம் தான் முதன் முதலில் மதிய உணவு என்கிற திட்டத்தை உருவாக்கி பள்ளிகளில் உணவு வழங்கியது. அதன்பின் படிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த திட்டத்தை முதல்வர்களாக இருந்த காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் செயல்படுத்தினார்கள்.

பின்னர் அது சத்துணவு திட்டமாக மாறியது. கடந்த 2001 முதல் 2006 வரை முதல்வராக இருந்த கலைஞர் மதிய உணவில் முட்டை வழங்கினார். வாரத்தில் 5 நாளும் முட்டை வழங்கி சத்துள்ளவர்களாக மாற்றப்பட்டது. தற்போது விதவிதமான உணவுகள் கூட வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தான் பள்ளிக்கு நீண்ட தூரம் நடந்து வருவதை பார்த்து, அப்படி நடந்து வந்தால் அவர்கள் எப்படி படிப்பார்கள் என வேதனைப்பட்டு அரசு பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்ல இலவச பேருந்து அட்டைகள் கலைஞர் முதல்வராக இருந்தபோது தந்தார். அதன் தொடர்ச்சியாக குக்கிராமத்தில் இருந்து எப்படி வருவார்கள் என இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது தற்போது வரை தொடர்கிறது. அரசாங்கம் இதுப்போன்ற சலுகைகள் வழங்ககாரணம், நீங்கள் படித்து நல்ல பணிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.