தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா அதிரடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 11- ஆம் தேதி அன்று உளுந்தூர்பேட்டை அருகே தனியார்ஆம்னிபேருந்தும்,தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பா.ஜ.க பிரமுகருமான சூர்யாவின்காரும்மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தன்காருக்குஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்தைஎடுத்துச்சென்று பணம் கேட்டுமிரட்டுவதாகப்பேருந்தின் உரிமையாளர் திருச்சிகண்டோன்மென்ட்காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து, சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை இன்றுஅதிரடியாககைதுசெய்தனர்.