Skip to main content

"மத்திய அரசு மிருக குணத்துடன் செயல்படுகிறது" - திமுக எம்.எல்.ஏ தாக்கு!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

மிருக குணத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை போய்கொண்டிருப்பதாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவானன் தெரிவித்தார்.

 

DMK MLA Condemned BJP

 



தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதல் கட்ட வாக்கு பதிவு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருவாரூர் உட்பட 5 ஒன்றியங்களில் நடைபெற்றது. முதல் கட்ட வாக்கு பதிவில் திருவாரூர் மாவட்டத்தில் 76.93 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

இரண்டாம்கட்ட தேர்தலில் மொத்தம் 48 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 340 ஒன்றிய குழு உறுப்பினர்கள் , 862 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 4328 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு பதிவு 933 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து ஒன்றியங்களில் காலை 9 மணி நிலவரப்படி 14.44 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் கொரடாச்சேரி அருகே கமுகக்குடியில் ஊராட்சி ஒன்றய தொடக்கப்பள்ளியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மிருக குணத்துடன் செயல்படுகிறது. இஸ்லாமிய, இலங்கை மக்களை பற்றி கவலை கொள்ளாமல் குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு அதிமுக அரசும் துணையாக செயல்படுகிறது. நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்" என தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.