Skip to main content

திமுக பிரமுகர் படுகொலை; இரண்டு பெண் உட்பட மூவர் கைது

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

DMK Member passed away police arrested three including two women

 

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய பகுதியில் உள்ள கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்(55), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திமுக இளைஞரணியில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். 

 

ஜெயக்குமார், அவர் வீட்டுக்கு அருகில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியில் உள்ள டீக்கடைக்கு தினசரி காலையில் டீ குடிக்க செல்வது வழக்கம். அதேபோல் நேற்றும் தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு டீ குடிக்க சென்றுள்ளார். டீக்கடையில் இருந்து காலை 6:30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீடு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இரும்பை சிவன் கோவில் அருகில் ஜெயக்குமாரை வழிமறித்த ஒரு மர்ம கும்பல் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். 

 

இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார், அலறி சத்தம் போட்டுள்ளார். அவர் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து, ஜெயக்குமாரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி (பொறுப்பு) அபிஷே குப்தா, ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 

விசாரணையில் கடந்த ஆண்டு அவரது ஊரில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதில் ஜெயக்குமார் தலையிட்டு பேசி தீர்த்து வைத்துள்ளார். இதில் ஒரு தரப்பினர் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

 

இந்த நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகன் மனோஜ்(20), அவரது தாய் சரஸ்வதி(38), சரஸ்வதியின் சகோதரி சாந்தி(40) ஆகியோரை கைது செய்துள்ளனர். கைதான அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன், சந்துரு ஆகிய இருவரையும் தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜெயக்குமார் உடலுக்கு அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் உட்பட ஏராளமான திமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.