Skip to main content

போட்டி வேட்பாளரை களம் இறக்கிய திமுக ந.செ கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

nm

 

திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், பாஜக ஒன்று, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இரண்டு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களிலும், மமக, விசிக தலா ஒருயிடத்திலும், சுயேட்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றனர்.

 

திமுக நகர மன்ற தலைவர் வேட்பாளராக ஏஜாஸ்அகமதுவை அறிவித்தது திமுக தலைமை. இதனை நகரச் செயலாளர் கவுன்சிலர் ஆறுமுகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கழக மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகியான கவுன்சிலர் ஷபீர் அகமதுவை சேர்மன் வேட்பாளராக முன்னிறுத்தினார். நகரமன்ற அலுவலகத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஏஜாஸ் அகமது, சேர்மன் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆம்பூர் ந.செ ஆதரவோடு கவுன்சிலர் தொழிலதிபர் ஷபீர் அகமதுவும் மனுசெய்தார். அப்போது நகராட்சி அலுவலகத்துக்கு எம்எல்ஏ வில்வநாதன், எம்பி கதிர்ஆனந்த் வருகை தந்தனர். எம்.பியும் எம்.எல்.ஏ வும் நகராட்சி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டுமென திமுக ந.செ ஆறுமுகம் தரப்பினர் கோஷங்கள் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

 

தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியபோது, ஏஜாஸ்அகமத் மற்றும் ஷபீர்அகமத் இருதரப்பிடையே சண்டை ஏற்பட்டது, தேர்தலை நடத்து என ஆறுமுகம் தரப்பு கவுன்சிலர்களும், நடத்தக்கூடாது என ஏஜாஸ்அகமத் தரப்பும் பேப்பர்களை தூக்கிவீசி, தேர்தலை நிறுத்து எனப் பிரச்சனை செய்தனர், தேர்தலை நடத்துங்கள், நடத்தக்கூடாது என அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் மல்லுக்கட்டியதால் மாவட்ட ஆட்சியரிடம்மிருந்து வந்த உத்தரவுப்படி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆம்பூர் நகரக் கழக செயலாளர் ஆறுமுகம், கட்சி தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிர்த்து வேட்பாளராக நின்ற ஷபீர்அகமத் இருவரையும் தற்காலிகமாகக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ஆம்பூர் நகர நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, நகர கழகத்தில் இரண்டு கோஷ்டிகள் உள்ளன. நகரச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒரு கோஷ்டி, மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன் தலைமையில் ஒரு கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள் உள்ளன. ந.செ ஆறுமுகம் தொழிலதிபர் ஷபீர்அகமத்வை சேர்மனாகவும், தன்னை வைஸ் சேர்மனாகவும் முன்னிறுத்தி கவுன்சிலர்களிடம் பிரச்சாரம் செய்தார், தேர்தலுக்கு பணமும் தந்தார்.

 

மாவட்ட அவைத்தலைவர் கோஷ்டி பெரிய கம்பெனி முதலாளியும், சில முதலாளிகளும் இணைந்து திமுக பொதுக்குழு உறுப்பினரான கவுன்சிலர் ஏஜாஸ்அகமத்வை சிபாரிசு செய்தனர். மா.செ தேவராஜ் எம்.எல்.ஏ, ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், வேலூர் எம்.பி கதிர்ஆனந்த் ஆதரவாக நின்றனர். இங்குதான் பிரச்சனையே உருவானது. நகர கமிட்டி சொல்வதை ஒதுக்கிவிட்டு, தொழிலதிபர் தரப்பு சொல்வதைக் கேட்டு தலைமைக்குச் சிபாரிசு செய்வது எந்த விதத்தில் நியாயம்?, கவுன்சிலர்கள் விரும்பியதால் தலைமை சொன்னதுக்கு மாறாக ஒரு வேட்பாளரை நிறுத்தினோம், கட்சி நிர்வாகியைத்தானே நிறுத்தினோம், அதற்காகக் கட்சியை விட்டு நீக்குவது எந்தவிதத்தில் நியாயம் எனக்கேள்வி எழுப்புகிறார்கள்.

 

மற்றொரு தரப்பு, தலைமையின் உத்தரவை மீறி வேட்பாளரை நிறுத்தியது முதல் தவறு, முதலாளிகளுக்கு ஆதரவாக தலைமை செயல்படுகிறது என்கிற தகவலைப் பரப்பியது பெரிய தவறு, எம்.பி, எம்.எல்.ஏவுக்கு எதிராக குரல் எழுப்பி அவமானப்படுத்தியது போன்றவற்றால்தான் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பவர்கள், ஷபீர்அகமத் பெரிய தொழிலதிபர் அவரை திமுக தொண்டர்கள், கவுன்சிலர்கள் சுலபமாக சந்திக்க முடியாது. அப்படியிருந்தால் எப்படி கட்சி வளரும், அதோடு ஆறுமுகத்துக்கு அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவை வாங்கியிருந்தார். இது எல்லாவற்றுக்கும் பணம் முக்கிய பங்கு வகித்தது என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.