Skip to main content

8 ஆண்டுகளுக்கு பிறகு சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய திமுக!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

சின்னமனூர் திமுக கவுன்சிலர் திரும்பியதால் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மூன்றாவது முறையாக நடந்த மறைமுகத் தேர்தலில் எட்டு ஆண்டிற்கு பிறகு போட்டியின்றி  திமுக கைப்பற்றியது. அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

DMK captures Chinnamanur panchayat union

 



தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சி உள்ளது. இங்கு 10 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த டிசம்பர் 30ல்  நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சின்னமனூர் ஊராட்சி 10 ஒன்றிய கவுன்சிலர்களில்  திமுக 6 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் பிடித்தது பத்து ஒன்றிய கவுன்சிலர்கள் ஜனவரி 6ஆம் தேதி பொறுப்பேற்றனர்.

தலைவர் துணைத்தலைவர் மறைமுகத் தேர்தலுக்கு யாரும் ஒத்துழைப்பு தராததால் ஜனவரி 11ஆம் தேதி ஒத்தி தேர்தல் வைக்கப்பட்டது. இதற்கிடையில் பொட்டிபுரம் 1 வது வார்டு திமுக உறுப்பினர் ஜெயந்தியை அதிமுகவினர் கடத்திச் சென்று அதிமுகவில் சேர்த்தனர். இதனால் திமுக 5 உறுப்பினர்களையும், அதிமுக 5 உறுப்பினர்களை கொண்டு சமநிலை அடைந்ததால் மறைமுக தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 11 ஆம் தேதி நடந்த மறைமுக தேர்தலுக்கு சமநிலையாக இருந்ததால் திமுக அதிமுக கவுன்சிலர்கள் யாரும் வருகை புரியாததால் மறுபடியும்  30 ஆம் தேதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த 30ஆம் தேதியிலும் உறுப்பினர்கள் யாரும் வருகை தராததால் மறு தேதி குறிப்பிடாமல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

 



அதன்படி மாநில தேர்தல் கமிஷன் கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தலை அறிவித்தது. அதைத்தொடர்ந்து சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர்கள் 6 பேர் வருகை புரிந்தனர். ஆனால் அதிமுக நான்கு ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்து விட்டனர். அதனால் போட்டியின்றி சின்ன பொருளாதாரம் நான்காவது வார்டு உறுப்பினர் நிவேதாவை தலைவராகத் தேர்வு செய்தனர். அதன் பின் நடந்த துணைத்தலைவர் தேர்தலிலும் அதிமுக புறக்கணித்ததால் பொட்டிபுரம் முதல் வார்டு கவுன்சிலர் ஜெயந்தியை துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர்.

இந்த தேர்தலை மாவட்ட பதிவாளர் ஜெயபிரகாஷ் ஸ்பெஷல் டிஆர்ஓ தியாகராஜன் மற்றும் தேர்தல் அலுவலர் சரவணன் ஆகியோர் நடத்தினார்கள். இந்தநிலையில் அதிமுகவில் சேர்ந்த ஜெயந்தி போலீஸ் பாதுகாப்புடன் பொட்டிபுரத்தில் தனது வீட்டில் சிறையில் இருந்தார். இதற்கிடையில் பொட்டிபுரம் கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய் என கண்டனம் தெரிவித்ததால் ஜெயந்தி கிராம மக்களுக்கு தலைவணங்கி மதிப்பளிக்கும் வகையில் அதிமுகவிலிருந்து விலகி மறுபடியும் திமுகவில் சேர்ந்தார். சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தை எட்டு ஆண்டுகள் கழித்து திமுக கைப்பற்றியுள்ளது. இப்படி திமுகவிலிருந்து அதிமுகவுக்கு தாவியா ஜெயந்தி மீண்டும் திமுகவுக்கு வந்ததின் மூலம் சின்னமனூர் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.