தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14- ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தே.மு.தி.க. கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.