Skip to main content

விஜயகாந்துக்கு கரோனா தொற்று!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

dmdk party vijayakanth corona positive admit at hospital

 

 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14- ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தே.மு.தி.க. கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'14+1 தரும் கட்சியுடன் தான் கூட்டணி' - பிரேமலதா விஜயகாந்த்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'Alliance only with the party that gives 14+1' - Interview with DMUDHIKA Premalatha Vijayakanth

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (07.02.2024) காலை 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரும் கட்சியுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். தேமுதிகவின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். அதையெல்லாம் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்'' என்றார்.

Next Story

தேர்தல் பேச்சுவார்த்தையை தொடங்கும் தேமுதிக 

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
DMDK starts election talks

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தேமுதிகவும் தனது தேர்தல் வேலைகளை தற்போது தொடங்கியுள்ளது. வரும் ஏழு அல்லது எட்டாம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து தேமுதிக கட்சியில் இருந்து தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் மாவட்டச் செயலாளர்களை ஆலோசித்து அதன் பிறகு கூட்டணி குறித்து முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. தேர்தல் பொறுப்பாளர்கள், பணிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பணிகளை தேமுதிக தொடங்க இருக்கிறது.

அதிமுக மற்றும் பாஜக சார்பில் ஏற்கனவே நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றன.