Skip to main content

திசைமாறும் கடத்தல் டெக்னிக்... கூரியர் வாகனத்தில் 350 கிலோ கஞ்சா

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

லாரிகள், சரக்கு வாகனங்கள், பேருந்துகள், டூவீலர் என்று சமயங்களில் கிடைத்த வாகனங்களில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது உளவாளிகளின் தகவலால் போலீசார் வசம் சிக்கிவிடுகின்றன. ஆனாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டங்களும், கடத்தல்களும் தலை கவிழ்ந்த மாதிரி தெரியவில்லை. தற்போது கடத்தல் புள்ளிகள் போலீசாரின் பார்வை பதியாதவகையில் தங்களின் கடத்தல் ரூட்டை டெக்னிக்கலாக மாற்றியுள்ளனர்.

 

நேற்றைய தினம் மாலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் சூரங்குடி போலீசார் வேம்பார் சோதனைச் சாவடியில்  வாகனச் சோதனையில் இருந்திருக்கின்றனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கூரியர் வாகனம் ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் கிழக்கு கடற்கரை சாலை வழியே தூத்துக்குடி நோக்கிப் பறந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கூரியர் வாகனத்தை விடாமல் தொடர்ந்து 15 கி.மீ. தொலைவு விரட்டி சென்றிருக்கிறார்கள். அவர்களின் துரத்தலைக் கண்டு பீதியானவர்கள் குளத்தூரையடுத்த பல்லாங்குளம் காட்டுப் பகுதியின் முள்வேலி புதருக்குள் கூரியர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின் தொடர்ந்த போலீசார் கூரியர் வாகனத்தை சோதனையிட்டதில் 350 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்து அதனையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

தகவலறிந்த எஸ்.பி.பாலாஜி சரவணன், ஏ.டி.எஸ்.பி.கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கஞ்சா கடத்தப்பட்ட கூரியர் வாகனத்தைப் பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரங்குடி போலீசார் தப்பியோடியவர்களை தனிப்படை மூலம் தேடி வருகின்றனர். சிக்கிய கஞ்சாவின் இந்திய மதிப்பு 2 கோடி என்றாலும் இதன் சர்வதேச மதிப்பு 8 கோடி என்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் குறையாது சரக்குகளை சப்ளை செய்கிற கூரியர் வாகனங்கள் இதுவரை சந்தேக வளையத்தில் இல்லை. தற்போதைய கடத்தல் மூலம் அவைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இலங்கைக்கு கடத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.