Skip to main content

திவாகரன் இல்ல திருமணம்... உறவுகள் புறக்கணிப்பு ஏன்?

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

5 வருடங்களுக்கு முன்பு அதிமுகவின் அதிகார மையமாக இருந்த மன்னார்குடி. ஜெ.வின் கோபத்தின் பார்வையில் பட்டபிறகும் கூட அதே நிலையில் இருந்தது. ஆனால் ஜெ.மறைவுக்கு பிறகு அதிகார மையம் உடைந்து சின்னாபின்னமாகிவிட்டது.
 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored

 

அதிகார மையத்தின் முதன்மையானவர் சசிகலா. ஜெ.மறைவுக்கு பிறகு அவரது கணவர் நடராஜன், செல்லத் தம்பி திவாகரன் ஆகியோர் சொல்லியும் கூட கேட்காமல் கட்சி, ஆட்சியை கைப்பற்றலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியே அவரை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் ர.ர.க்களே. அந்த சந்தர்ப்பத்தில் மீண்டு எழுந்தவர் தினகரன். அவருக்கு துணையாக அவரது மச்சான் டாக்டர் வெங்கசேடன் வர அதிமுக உடைந்து தனி அணியாகி. பிறகு அமமுக என்றானது. அதுவரை தினகரனுக்கு பக்கபலமாக இருந்து தனது ஆதரவாளர்களை தனி அணியில் சேர்த்த திவாகரனுக்கும் தினகரனுக்கும் கருத்துவேறுபாடுகள் எழ..  அ.ம.மு.க என்ற கட்சியில் திராவிடம் இல்லை என்று சொல்லி அண்ணா திராவிடர் கழகத்தை உருவாக்கி கட்சிக்கு தலைவர் ஆகிவிட்டார்.

 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored


அ.தி.க கட்சி தொடங்கும் போது சசிகலா பெயரையும், படத்தையும் பயன்படுத்தியதால் சிறையில் இருந்த சசிகலா அந்த கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது போல வழக்கறிஞர் மூலம் அறிக்கை கொடுத்தார். அதன் பிறகு திவாகரனும் சசிகலாவை தனது முன்னாள் சகோரி என்று பிரஸ்மீட் கொடுத்தார்.

தொடர்ந்து அ.தி.க – அ.ம.மு.க தனித் தனிக் கட்சியாக செயல்படத் தொடங்கியது. திவாகரனிடம் இருந்தும் அ.ம.மு.க வுக்கு போனவர்கள் அங்கேயே தங்கிவிட்டதுடன். பலர் அ.தி.மு.க வுக்கும் போய்விட்டனர். திவாகரனும் – தினகரனும் பொது இடங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்துக் கொண்டனர். இதனால் மேலும் குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டது.  சசிகலாவின் கணவர் ம.நடராஜன் இறந்த போது அனைவரும் வந்து தனித்தனியாக கலந்து கொண்டாலும் ஒட்டிக் கொள்ளவில்லை. அதன் பிறகும் வேற்றுமை அதிகமானது.

 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored

 

இந்த நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த்க்கு ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகனும், தினகரன் சகோதரர் பாஸ்கரன் மகள் ஜெயாஸ்ரீக்கும் திருமணம் நிச்சயக்கப் பெற்று திருமணத்திற்கு உறவுகள் அனைவரும் வரவேண்டும் என்று திவாகரன் பத்திரிக்கை கொடுத்து அழைத்திருந்தார். சசிகலாவுக்கும் அழைப்பு கொடுத்து பரோலில் வர வேண்டும் என்று அழைத்திருந்தார்.

இதை அறிந்த தினகரன்.. கடந்த மாதம் தஞ்சை எம்.பி. பழநிமாணிக்கம் தம்பி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற ரீதியில் பேசிய வீடியோவை சசிகலாவுக்கு காட்டி அவரை பரோலில் வரவிடாமல் தடுத்ததுடன் தனது உறவுகளை அனைவரையும் வரவிடாமல் தடுத்துவிட்டார். இளவரசி மகன் விவேக் மணமகன் ஜெயானந்த் மீது பற்றுக் கொண்டவர் என்றாலும் அவரும் கலந்து கொள்ளவில்லை.அ.ம.மு.க வினரும் வரவில்லை. 

அதேபோல ம.நடராஜன் உறவுகளும் காணவில்லை. அதில் கலந்து கொண்ட ஒரே உறவு டாக்டர் வெங்கடேசன் மட்டுமே. அவருக்கும் தினகரனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட பிணக்கு காரணமாகவே வெங்கடேசன் கலந்து கொண்டார். ஒட்டு மொத்த உறவுகளும் புறக்கணித்த போது டாக்டர் வெங்கடேசனும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தார் திவாகரன்.

 

Divakaran Home Marriage ... Why Relationships Ignored


ஆனால் தி.மு.க வினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒரத்தநாடு புல்லட் ராமச்சந்திரன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் மணமக்களுடன் நின்ற புல்லட் ராமச்சந்திரன் படம் எடுங்கப்பா என்று சொல்லி புகைப்படம் எடுத்த பிறகே அங்கிருந்து அகன்றார். சமீபத்தில் அ.ம.மு.க வில் இருந்து தி.மு.க வில் இணைந்த மணமேல்குடி பரணி கார்த்திகேயன் சாப்பாட்டு பந்தல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்தார். நாகை எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, பி.ஆர்.பாண்டியன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் 9 ந் தேதி சென்னையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் அ.தி.மு.கவினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.