Skip to main content

திண்டுக்கல் அருகே 600 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

Discovery of a 600 year old inscription near Dindigul!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டம், சின்னாளப்பட்டி அருகில் மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த கர்நாடக பாணியிலான அடுக்குநிலை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனைவர் மு.லட்சுமணமூர்த்தி, சின்னாளப்பட்டி அருகில் மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, அக்கோயிலின் பின்புறம் 9 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்ட ஒரு தூணில்  அதன் 4 பக்கங்களிலும் சிறிய சிற்பங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார். இதை ஆய்வு செய்ததில், இது ஒரு அடுக்குநிலை நடுகல் என்பது கண்டறியப்பட்டது. 

 

இதுபற்றி உதவி பேராசிரியர் முனைவர் மு. லட்சுமணமூர்த்தி கூறியதாவது, “தூணில் கீழே ஊன்றுவதற்கு 2 அடி போக மீதம் உள்ள 7 அடியில், ஒரு அடிக்கு ஒரு அடி என்ற அளவில் 7 பகுதியாக தூண் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 அடுக்குகளில் சிறிய அளவிலான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல அடுக்குகளில் நடுகல் சிற்பங்கள் அமைந்திருப்பதால் இதை  அடுக்குநிலை நடுகல் என்கிறார்கள். இதன் ஒரு பக்கம் தரையில் புதைந்துள்ளது. எனவே அதில் உள்ள சிற்பங்களை அறிய முடியவில்லை. மீதமுள்ள 3 பக்கங்களில் உள்ள சிற்பங்களை ஆய்வு செய்ததில் இது கர்நாடக மாநிலத்தில் உள்ள அடுக்குநிலை நடுகல் போன்ற அமைப்பில் காணப்படுவதை அறியமுடிகிறது. 

 

பல்லக்கில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு, கவரி வீசும் பணி ஆட்கள், லிங்கத்தை வணங்கும் காளை உடலுடைய முனிவர், குதிரை மீது அமர்ந்துள்ள வீரன், பசுவிடம் பால் குடிக்கும் கன்று, இருபுறமும் இரு மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் ஆகியவை குறிப்பிடத்தக்க சிற்பங்கள் ஆகும். மேலும், வீரர்கள் தங்கள் மனைவியருடன் இருக்கும் சிற்பங்கள் அதிகளவில் உள்ளன. 



குழுவின் தலைவன் பல்லக்கில் அமர்ந்துள்ளான். இருவர் அதைத் தூக்கிச் செல்கிறார்கள். ஒருவர் கவரி வீசுகிறார். குதிரையில் அமர்ந்த நிலையில் மூவரும், வாள் மற்றும் ஈட்டியுடன் 9 பேருமாக இதில் 12 வீரர்கள் இருப்பதை அறிய முடிகிறது. இதன் மூன்று பக்கங்களில் மொத்தம் 26 பெண்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பேர் கையை மேலே உயர்த்தியும், இருவர் கையில் குழந்தையுடனும், நால்வர் சாதாரணமாகவும் காட்சியளிக்கிறார்கள். சிற்பங்களில் ஒரு பசுவும் கன்றும், 4 மாடுகளும், 3 குதிரைகளும் காட்டப்பட்டுள்ளன. சிற்பங்களைச் சுற்றி கொடி, பூச்சரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. வீரர்கள் இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்துள்ளனர். நடுகல்லின் மேற்பகுதி கூடு போன்று அமைந்துள்ளது. 


இது போன்ற அடுக்குநிலை நடுகற்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் அமைப்பைக் கொண்டு மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் இரு குழுக்கள் அல்லது ஊர்களுக்கிடையில் நடந்த பூசலின்போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் உடன்கட்டை ஏறிய அவர்களின் மனைவியர் நினைவைப் போற்றும் வகையில் இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இதை கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.