Skip to main content

கை இல்லாட்டி என்னங்க? சாதிக்க தைரியம் இருக்கு மனசுல.. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரன் சீனிவாசன்

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

 Disabled cricketer Srinivasan


பொள்ளாச்சி அருகே உள்ளது மாமரத்துப் பட்டி கிராமம். குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டது இந்த ஊர். இங்கு சீனிவாசன் என்ற 28 வயது நிரம்பிய வாலிபர் கிரிக்கெட் மோகத்தால் சிறு வயதில், தனது நண்பருடன் தென்னை மட்டையில் பேட் செய்து விளையாடுவார்.

 

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தாய் தந்தை இறந்ததால் பாட்டி ரங்கம்மாள் கூலி வேலைக்குச் சென்று சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் சுரேஷை படிக்க வைத்தார். படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்ற சீனிவாசன் பொறியியல் படிப்பில் தேர்வு பெற்றார்.

 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து திறமைகளை வெளிப்படுத்தி வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, விராட் கோலி ஆகியோர்.

 

இதுவரை 100 போட்களில் விளையாடி உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இறுதி தகுதித்தேர்வு  நடக்கும்போது  சிறு விபத்து ஏற்பட்டு மீண்டு உள்ளார். 


குஜராத், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை என இவர் கால் பதித்த இடங்களில் எல்லாம் அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், நவம்பர் மாதம் 2ஆம் தேதி, மாற்றுத்திறனாளிக்கு நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் சென்னை ஸ்டார்ஸுக்கு விளையாட துபாய்க்குச் செல்ல பணம் இல்லாததால், தனது சகோதரர் சுரேஷுடன் சென்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

 

Ad

 


அவரும் சீனிவாசனுக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும், தன்னைப்போல மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்த சீனிவாசன், சாதிக்க கை தேவையில்லை, மனசில் தைரியம் இருந்தால் போதும். என  தற்போது தன்னம்பிக்கையுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.